Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 539 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
539நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 6
அற்றவன் மருத முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே
அற்றவன், Attravan - (ஏற்கனவே எனக்கு) அற்றத் தீர்ந்தவனாய்
மருதம் முறிய, Marutham muriya - (யமளார்ஜுந மென்னும்) மருத மாங்களானவை முறிந்து விழும்படியாக
நடை கற்றவன், Nadai katravan - தவழ் நடை நடக்கக் கற்றவனாய்
கஞ்சனை, Kanjanai - கம்சனை
வஞ்சனையில், Vanjanaiyil - வஞ்சனையிலே
செற்றவன், Setravan - கொன்று முடித்தவனாய்
திகழும் மதுரை பதி கொற்றவன், Thigazhum mathurai pathi kotravan - விளங்குகின்ற மதுரைமா நகர்க்கு அரசனான கண்ணபிரான்
வரில், Varil - வந்திடுவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்