Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 540 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
540நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 7
அன்று இன்னாதான செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே
அன்று, Andru - முற் காலத்தில்
இன்னாதன செய் சிசுபாலனும், Inaadhana sei sisubalanum - வெறுக்கக் கூடிய கெட்ட காரியங்களையே செய்து வந்த சிசுபாலனும்
நின்ற நீள் மருதும், Nindra neel marudhum - வழியிடையே நின்ற பெரிய இரட்டை மருத மரங்களும்
எருதும், Erudhum - ஏழு ரிஷபங்களும்
புள்ளும், Pullum - பகாஸுரனும்
வென்றி வேல் விறல் கஞ்சனும், Vendri vel viral kanjanum - வெற்றியை விளைவிக்க வல்ல வேலாயுத மென்ன (அதைப் பிடிக்கத்தக்க) மிடுக்ககென்ன இவற்றை யுடையவனான் கம்சனும்
வீழ, Veezha - முடிந்து விழும்படியாக
முன், Mun - எல்லார் கண்ணெதிரிலும்
கொன்றவன், Kondravan - கொன்றொழித்த கண்ண பிரான்
வரில், Varil - வரக்கூடுமாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்