திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 541 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 8 | ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்துவிளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே | பதவுரை Show / Hideஆவல் அன்பு உடையார் தம், Aaval anbu udaiyaar tham - ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய மனத்து அன்றி மேவலன், Manathu andri mevalan - நெஞ்சு தவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும் விரை சூழ் துவராபதி காவலன், Virai soozh Dhuvaraapathi kaavalan - நல்ல வாஸனை சூழ்ந்த த்வாரகாபுரிக்கு நிர்வாஹகனும் கன்று மேய்த்து விளையாடும் கோவலன், Kanru meithu vilaiyaadum kovalan - கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனுமாகிய கண்ணபிரான் வரில், Varil - வரக் கூடுமாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |