Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 542 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
542நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 9
கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி யொன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே
பண்டு, Pandu - முற் காலத்திலே
கோலம் கொண்ட குறள் உரு ஆய், Kolam konda kural uru aai - (முப்புரி நூலும் க்ருஷ்ணாஜிநமும் முஞ்ஜியும் பவித்ரமும் தண்டுமான) கோலம் பூண்ட வாமந ரூபியாய்
மாவலி தன், Maavali than - பெரு வேள்வியில் சென்று
அண்டமும், Andamum - மேலுலகங்களையும்
நிலனும், Nilanum - கீழுலகங்களையும்
அடி ஒன்றினால், Adi ondrinaal - ஒவ்வோரடியாலே
கொண்டவன், Kondavan - அளந்து கொண்ட த்ரிவிக்ரமன்
வரில், Varil - வருவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்