Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 544 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
544நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 11
ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே
ஊடல் கூடல், Oodal koodal - ஊடலோடே கூடியிருக்கை யென்ன, (அதாவது ப்ரணய ரோஷஸஹிதைகளா யிருக்கை யென்ன)
உணர்தல், Uṇardhal - குறைகளை உணர்த்துகை யென்ன
புணர்தல், Puṇardhal - (பிறகு) ஸம்ச்லேஷிக்கை யென்ன (இப்படிப் பட்ட காரியங்களிலே)
முன், Muṉ - அநாதி காலமாக
நீடு நின்ற, Needu nindra - நீடித்துப் பொருந்தி நின்ற
நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலை, Nirai pugazh aaichiyar koodalai - நிறைந்த புகழையுடைய ஆய்ப் பெண்கள் (இழைத்த) கூடலைப் பற்றி
குழல் கோதை, Kuzhal kothai - அழகிய மயிர் முடியை யுடையனான ஆண்டாள்
கூறிய , Kooriya - அருளிச் செய்த
பாடல் பத்தும், paadal pathum - பத்துப் பாட்டுக்களையும்
வல்லார்க்கு, vallarkku - ஓத வல்லவர்களுக்கு
பாவம் இல்லை, paavam illai - (எம்பெருமானைப் பிரிந்து துக்கிக்கும்படியான) பாவம் இல்லையாம்