| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 544 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 11 | ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலைக் குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே | ஊடல் கூடல், Oodal koodal - ஊடலோடே கூடியிருக்கை யென்ன, (அதாவது ப்ரணய ரோஷஸஹிதைகளா யிருக்கை யென்ன) உணர்தல், Uṇardhal - குறைகளை உணர்த்துகை யென்ன புணர்தல், Puṇardhal - (பிறகு) ஸம்ச்லேஷிக்கை யென்ன (இப்படிப் பட்ட காரியங்களிலே) முன், Muṉ - அநாதி காலமாக நீடு நின்ற, Needu nindra - நீடித்துப் பொருந்தி நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலை, Nirai pugazh aaichiyar koodalai - நிறைந்த புகழையுடைய ஆய்ப் பெண்கள் (இழைத்த) கூடலைப் பற்றி குழல் கோதை, Kuzhal kothai - அழகிய மயிர் முடியை யுடையனான ஆண்டாள் கூறிய , Kooriya - அருளிச் செய்த பாடல் பத்தும், paadal pathum - பத்துப் பாட்டுக்களையும் வல்லார்க்கு, vallarkku - ஓத வல்லவர்களுக்கு பாவம் இல்லை, paavam illai - (எம்பெருமானைப் பிரிந்து துக்கிக்கும்படியான) பாவம் இல்லையாம் |