| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 548 | நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 4 | என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும் துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய் | குயிலே!, Kuyile! - ஓ குயிலே! என்பு உருகி, Enbu Urugi - எலும்புகள் உருகிப் போனதுமல்லாமல் இனம் வேல் நெடு கண்கள் இமை பொருந்தா, inam vel nedu kangal imai porundha - சிறந்த வேல் போன்ற விசாலமான கண்களும் மூடிக் கிடக்கின்றன வில்லை பல நாளும், pala nalum - நெடுங்காலமாக துன்பம் கடல் புக்கு, thunbam kadal pukku - விச்லேஷ வ்யஸநமாகிற கடலிலே அழுந்தி வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது, vaikundhan enpathu or thoni perathu - ஸ்ரீவைகுண்டநாதன் என்கிற ஒரு தோணியை அடையப் பெறாமல் உழல்கின்றேன், uzhalginren - அக்கடலுக்குள்ளேயே தட்டித் தடுமாறிக் கொண்டிராநின்றேன் அன்பு உடையாரை பிரிவுறும் நோய் அது, anbu udaiyarai pirivurum noi adhu - அன்பர்களைப் பிரிவதனாலுண்டாகும் துக்கத்தை நீயும் அறிதி, neeyum arithi - நீயும் அறிவாயன்றோ பொன் புரை மேனி, pon purai meni - பொன் போன்ற மேனியை யுடையனாய் கருளன் கொடி உடை, karulan kodi udai - கருடனைக் கொடியாக வுடையவனான புண்ணியனை, punniyanai - “தர்மமே வடிவெடுத்தவன்” என்னப் படுகிற கண்ண பிரானை வர கூவாய், vara koovai - இங்கே வரும்படி கூவு |