திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 548 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
548நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 4
என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும் துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்
பதவுரை Show / Hide
குயிலே!, Kuyile! - ஓ குயிலே!
என்பு உருகி, Enbu Urugi - எலும்புகள் உருகிப் போனதுமல்லாமல்
இனம் வேல் நெடு கண்கள் இமை பொருந்தா, inam vel nedu kangal imai porundha - சிறந்த வேல் போன்ற விசாலமான கண்களும் மூடிக் கிடக்கின்றன வில்லை
பல நாளும், pala nalum - நெடுங்காலமாக
துன்பம் கடல் புக்கு, thunbam kadal pukku - விச்லேஷ வ்யஸநமாகிற கடலிலே அழுந்தி
வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது, vaikundhan enpathu or thoni perathu - ஸ்ரீவைகுண்டநாதன் என்கிற ஒரு தோணியை அடையப் பெறாமல்
உழல்கின்றேன், uzhalginren - அக்கடலுக்குள்ளேயே தட்டித் தடுமாறிக் கொண்டிராநின்றேன்
அன்பு உடையாரை பிரிவுறும் நோய் அது, anbu udaiyarai pirivurum noi adhu - அன்பர்களைப் பிரிவதனாலுண்டாகும் துக்கத்தை
நீயும் அறிதி, neeyum arithi - நீயும் அறிவாயன்றோ
பொன் புரை மேனி, pon purai meni - பொன் போன்ற மேனியை யுடையனாய்
கருளன் கொடி உடை, karulan kodi udai - கருடனைக் கொடியாக வுடையவனான
புண்ணியனை, punniyanai - “தர்மமே வடிவெடுத்தவன்” என்னப் படுகிற கண்ண பிரானை
வர கூவாய், vara koovai - இங்கே வரும்படி கூவு