| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 549 | நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 5 | மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய் | மெல்நடை அன்னம், Melnadai Annam - மந்தகதி யுடைய அன்னப் பறவைகள் பரந்து, Parandhu - எங்கும் பரவி விளையாடும், Vilaiyadum - விளையாடுவதற்கு இருப்பிடமான வில்லிபுத்தூர், Villiputhoor - ஸ்ரீவில்லிபுத்தூரிலே உறைவான் தன், Uraivan Than - எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானுடைய பொன் அடி, Pon adi - அழகிய திருவடிகளை காண்பது ஓர் ஆசையினால்,Kanbadhu Or Aasaiyinal - காண வேணுமென்றுண்டான ஆசையினாலே பொரு கயல் என் கண் இணை, Poru Kayal En Kan Inai - சண்டையிடும் இரண்டு கெண்டைகள் போன்ற எனது கண்கள் துஞ்சா,Thunjaa - உறங்குகின்றனவில்லை குயிலே, Kuyile - ஓ குயிலே! உலகு அளந்தான், Ulagu Alandhaan - (த்ரிவிக்ரமனாய்) உலகங்களை அளந்த பெருமான் வர, Vara - இங்கே வரும்படி கூவாய், Koovai - கூவு (அப்படி கூவுவாயாகில்) இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோலம் கிளியை, In Adisilodu Paal amudhu Ootti Edutha En Kolam Kiliyai - கன்ன லமுதையும் பாலமுதையும் ஊட்டி வளர்க்கப் பெற்ற எனது அழகிய கிளியை உன்னோடு, Unnodu - உன்னோடே தோழமை கொள்ளுவன், Thozhamai Kolluvan - ஸ்நேஹப் படுத்தி வைப்பேன் |