| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 552 | நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 8 | சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தமுடையன் நாங்கள் எம்மில் இருந்தொட்டிய கச் சங்கம் நானும் அவனும் அறிதும் தேன்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில் அவனை நான் செய்வன காணே | தேம் கனி, Them Kani - இனிமையான பழங்களை யுடைய மாபொழில், Maapozhil - மாந்தோப்பிலே செம் தளிர் கோதும், Sem Thalir Kodhum - சிவந்த துளிர்களை வாயலகால் கொந்துகிற சிறு குயிலே!, Siru Kuyile! - இளங்குயிலே! சார்ங்கம், Saarngam - தனது வில்லை வளைய வலிக்கும், Valaiya Valikkum - வளைத்து வலிக்கும் சக்தியை யுடைய தட கை, Thada Kai - பெரிய திருக் கைகளை யுடையனாய் சதுரன், Sathuran - ஸகலவித ஸாமர்த்தியமுடையனான எம்பெருமான் பொருத்தம் உடையன், Porutham Udaian - ப்ரணயாதியிலும் வல்லமை பெற்றவன் நாங்கள், Naangal - அவனும் நானும் ஆக இருவரும் இருந்து, Irundhu - சேர்ந்திருந்து எம்மில் ஒட்டிய, Emmil Otiya - எங்களுக்குள் ரஹஸ்யமாகச் செய்து கொண்ட கச்சங்கம், Kachangam - ஸங்கேதத்தை நானும் அவனும் அறிதும், Naanum Avanum Aridhum - நாங்களிருவருமே அறிவோமேயன்றி வேறொருவரும் அறியார் ஆங்கு திருமாலை, Aangu Thirumaalai - தூரஸ்தனாயிருக்கிற ஸ்ரீ: பதியை ஒல்லை விரைந்து, Ollai Virainthu - மிகவும் சீக்கிரமாக கூ கிற்றி ஆகில் நீ, Koo Kitri Aagil Nee - கூவ வல்லையே யானால் நீ அவனை, Avanai - (பிறகு அவன் இங்கு வந்த பிற்பாடு) அவன் விஷயத்தில் நான் செய்வன, Naan Seivana - நான் செய்யப் போகிற மிறுக்குக்களை காண், Kaan - காணக் கடவை |