| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 553 | நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 9 | பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர் பாசத்தகப் பட்டிருந்தேன் பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக் கொண்டிது நீ கேள் சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல் இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும் | பொங்கு ஒளி வண்டு, Pongu Oli Vandu - மிக்க வொளியை யுடைய வண்டுகளானவை இரைக்கும் பொழில், Iraikkum Pozhil - (மது பாந மயக்கத்தாலே) இசை பாடாநின்ற சோலையிலே வாழ், Vaazh - களித்து விளையாடுகிற குயிலே!, Kuyile! - கோகிலமே! இது, Idhu - நான் சொல்லுகிற இதனை நீ குறிக்கொண்டு கேள், Nee Kurikondu Kel - நீ பராக்கில்லாமல் ஸாவதாநமாய்க் கேள் நான், Naan - நான் பைங்கிளி வண்ணன் சிரி தரன் என்பது ஓர் பாசத்து, Paingili Vannan Siri Tharan Enpathu Or Pasathu - பசுங்கிளி போன்ற நிறத்தை யுடையனான ஸ்ரீ: பதி யென்கிற ஒரு வலையிலே அகப்பட்டு இருந்தேன், Agappattu Irundhen - சிக்கிக் கொண்டு கிடக்கிறேன் இங்கு உள்ள காவினில், Ingu Ulla Kaavinil - இந்தச் சோலையிலே வாழ கருதில், Vaazha Karuthil - நீ வாழ நினைக்கிறாயாகில் சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல், Sangodu Chakkarathaan Vara Koovuthal - திருவாழி திருச்சங்குடையனான எம்பெருமான் (இங்கே) வரும்படி கூவுவதென்ன பொன் வளை கொண்டுதருதல், Pon Valai Kondu Tharuthal - (நான் இழந்த) பொன் வளைகளைக் கொண்டு வந்து கொடுப்பதென்ன இரண்டத்து, Irandathu - இவையிரண்டுள் எதாவதொரு காரியம் திண்ணம் வேண்டும், Thinnam Vendum - நீ கட்டாயம் செய்து தீரவேண்டும் |