Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 555 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
555நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 11
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே
வேல் கண், Vel Kan - வேல் போன்ற கண்களை யுடையளாய்
மடந்தை, Madanthai - பெண்மைக்கு உரிய குணங்கள் நிறைந்தவளாய்
கண் உறு நால்மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை, Kan Uru Naalmaraiyor Pudhuvai Mannan Pattar Piran Kothai - ஸ்வரூப தனமான நான்கு வேதங்களையும் ஒதின ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய மகளான ஆண்டாள்
அடி விண் உற நீண்டுதாவிய மைந்தனை, Adi Vin Ura Neenduthaaviya Maindhanai - திருவடியானது பரமாகாசத்தளவும் போய்ப் பொருந்தும் படியாக
நெடுக வளர்ந்து, Neduga Valarndhu - (உலகங்களை) வியாபித்தமிடுக்கை யுடையனான எம்பெருமானை
விரும்பி, Virumbi - ஆசைப் பட்டு
கருங் குயிலே என் கடல் வண்ணனை கண் உறகூவு என்ற மாற்றம், Karung Kuyile En Kadal Vannanai Kan Urakoovu Endra Maatram - ஓ கரியகுயிலே! கடல் போன்ற திரு நிறத்தை யுடையனான என் காதலனை நான் ஸேவிக்கும்படி நீ கூவு என்று நியமித்த பாசுரமாக
சொன்ன, Sonna - அருளிச் செய்த
நண்ணுறு வாசகம் மாலை, Nannuru Vaasakam Maalai - போக்யமான (இந்த) ஸ்ரீ ஸூக்தி மாலையை
வல்லார், Vallar - ஓத வல்லவர்கள்
‘நமோநாராயணாய்‘ என்பர், “Namo Narayanaaya” Enbar - எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரராகப் பெறுவர்கள்