| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 556 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 1 | வாரண மாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! நம்பி, Nambi - ஸகல குண பரிபூர்ணனான நாரணன், Naaranan - ஸ்ரீமந் நாராயணன் ஆயிரம் வாரணம் சூழ, Aayiram Vaaranam Soozha - ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர வலம் செய்து நடக்கின்றான் என்று எதிர், Valam Seidhu Nadakindran Endru Edhir - பிரதக்ஷிணமாக எழுந்தருளாகிற னென்று (வாத்ய கோஷதிகளால் நிச்சயித்து) பொன் பூரண குடம் வைத்து, Pon Poorana Kudam Vaithu - பொன் மயமான பூர்ண கும்பங்களை வைத்து புரம் எங்கும், Puram Engum - பட்டணம் முழுதும் தோரணம் நாட்ட, Thoranam Naata - தோரண ஸ்தம்பங்கள் நாட்ட (இந்த நிலையையை) நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |