| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 557 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 2 | நாளை வதுவை மணம் என்று நாளிட்டு பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர் காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! நாளை, Naalai - நாளைக்கு வதுவை மணம் என்று நாள் இட்டு, Vadhuvai Manam Endru Naal Ittu - விவாஹ மஹோத்ஸவ மென்று முஹூர்த்தம் நிர்ணயித்து பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ், Paalai Kamugu Parisu Udai Pandhal Keezh - பாளைகளோடு கூடின பாக்கு மரங்களாகிற அலங்காரங்களை யுடைத்தான மணப் பந்தலின் கீழே கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை, Kolari Maadhavan Govindhan Enbaan Or Kaalai - நரஸிம்ஹனென்றும் மாதவனென்றும் கோவிந்தனென்றும் திருநாமங்கள் பூண்ட ஒரு யுவாவானவன் புகுத, Pugutha - பிரவேசிக்க நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |