Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 558 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
558நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 3
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து
மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம், Indiran Ullitta Devar Kuzham ellam - இந்திரன் முதலான தேவ ஸமூஹங்களெல்லாம்
வந்து இருந்து, Vandhu Irundhu - (இந்திலத்திலே) வந்திருந்து
என்னை மகள் பேசி, Ennai Magal Pesi - என்னைக் கல்யாணப் பெண்ணாக வார்த்தை சொல்லி
மந்திரித்து, Mandhirithu - அதற்குமேல் ஸம் பந்திகள் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் விஷயமாக யோசித்து முடிவுசெய்து கொண்டு (பிறகு)
அந்தரி, Andhari - ‘துர்க்கை‘ என்கிற நாத்தனார்
மந்திரம் கோடி உடுத்தி, Mandhiram Kodi Uduthi - கல்யாண புடைவையை எனக்கு உடுத்தி
மணம் மாலை சூட்ட, Manam Maalai Soota - பரிமளம் மிக்க புஷ்பங்களையும் சூட்ட
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்