Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 559 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
559நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 4
நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பாப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
பாப்பனர் சிட்டர்கள் பல்லார், Paapanar Sittargal Pallaar - சிஷ்டர்களான பல ப்ராஹ்மணர்கள்
நால் திசை, Naal Dhisai - நான்கு திசைகளிலுமிருந்து
தீர்த்தம், Theertham - தீர்த்தங்களை
கொணர்ந்து, Konarndhu - கொண்டு வந்து
நனி நல்கி, Nani Nalki - நன்றாகத் தெளிந்து
எடுத்து ஏத்தி, Eduthu Ethi - உச்ச ஸ்வரமாக வெடுத்து மங்களா சாஸநம் பண்ணி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு, Poopunai Kanni Punithanodu - (பலவகைப்) புஷ்பங்கள் புனைந்த மாலையை யுடையவனாய்ப் பரம பாவநனான கண்ண பிரானோடு
என்றன்னை, Endrannai - என்னை (இணைத்து)
காப்பு நாண் கட்ட, Kaapu Naan Katta - கங்கணங்கட்ட
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்