| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 559 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 4 | நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி பாப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! பாப்பனர் சிட்டர்கள் பல்லார், Paapanar Sittargal Pallaar - சிஷ்டர்களான பல ப்ராஹ்மணர்கள் நால் திசை, Naal Dhisai - நான்கு திசைகளிலுமிருந்து தீர்த்தம், Theertham - தீர்த்தங்களை கொணர்ந்து, Konarndhu - கொண்டு வந்து நனி நல்கி, Nani Nalki - நன்றாகத் தெளிந்து எடுத்து ஏத்தி, Eduthu Ethi - உச்ச ஸ்வரமாக வெடுத்து மங்களா சாஸநம் பண்ணி பூப்புனை கண்ணிப் புனிதனோடு, Poopunai Kanni Punithanodu - (பலவகைப்) புஷ்பங்கள் புனைந்த மாலையை யுடையவனாய்ப் பரம பாவநனான கண்ண பிரானோடு என்றன்னை, Endrannai - என்னை (இணைத்து) காப்பு நாண் கட்ட, Kaapu Naan Katta - கங்கணங்கட்ட நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |