Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 560 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
560நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 5
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
சதிர் இள மங்கையர் தாம், Sathir Ila Mangaiyar Thaam - அழகிய இளம் பெண்கள்
கதிர் ஒளி தீபம், Kathir Oli Theepam - ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியை யுடைய மங்கள தீபத்தையும்
கலசம், Kalasam - பொற் கலசங்களையும்
உடன் ஏந்தி, Udan endhi - கையில் ஏந்திக் கொண்டு
வந்து எதிர் கொள்ள, Vandhu Edhir Kolla - எதிர் கொண்டு வர
மதுரையார் மன்னன், Madhuraiyar Mannan - மதுரையிலுள்ளார்க்கு அரசனான கண்ண பிரான்
அடி நிலை தொட்டு, Adi Nilai Thottu - பாதுகைகளைச் சாத்திக் கொண்டு
எங்கும் அதிர, Engum Adhira - பூமி யெங்கும் அதிரும் படியாக
புகுத, Pugutha - எழுந்தருள
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்