| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 560 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 5 | கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! சதிர் இள மங்கையர் தாம், Sathir Ila Mangaiyar Thaam - அழகிய இளம் பெண்கள் கதிர் ஒளி தீபம், Kathir Oli Theepam - ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியை யுடைய மங்கள தீபத்தையும் கலசம், Kalasam - பொற் கலசங்களையும் உடன் ஏந்தி, Udan endhi - கையில் ஏந்திக் கொண்டு வந்து எதிர் கொள்ள, Vandhu Edhir Kolla - எதிர் கொண்டு வர மதுரையார் மன்னன், Madhuraiyar Mannan - மதுரையிலுள்ளார்க்கு அரசனான கண்ண பிரான் அடி நிலை தொட்டு, Adi Nilai Thottu - பாதுகைகளைச் சாத்திக் கொண்டு எங்கும் அதிர, Engum Adhira - பூமி யெங்கும் அதிரும் படியாக புகுத, Pugutha - எழுந்தருள நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |