| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 561 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 6 | மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! மத்தளம் கொட்ட, Mathalam Kotta - மத்தளங்கள் அடிக்கவும் வரி சங்கம் நின்று ஊத, Vari Sangam Nindru Oodha - ரேகைகளை யுடைய சங்குகளை ஊதவும் மைத்துனன் நம்பி மதுசூதனன், Maithunan Nambi Madhusudhanan - மைத்துனமை முறையை யுடையனாய் பூர்ணனான கண்ண பிரான் முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் வந்து, Muthu Udai Thaamam Nirai Thaazhntha Pandhal Keezh Vandhu - முத்துக்களை யுடைய மாலைத் திரள்கள் தொங்க விடப் பெற்று பந்தலின் கீழே வந்து என்னை கைத் தலம் பற்ற, Ennai Kaithalam Patra - என்னைப் பாணி க்ரஹணம் செய்தருள நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |