Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 561 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
561நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 6
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
மத்தளம் கொட்ட, Mathalam Kotta - மத்தளங்கள் அடிக்கவும்
வரி சங்கம் நின்று ஊத, Vari Sangam Nindru Oodha - ரேகைகளை யுடைய சங்குகளை ஊதவும்
மைத்துனன் நம்பி மதுசூதனன், Maithunan Nambi Madhusudhanan - மைத்துனமை முறையை யுடையனாய் பூர்ணனான கண்ண பிரான்
முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் வந்து, Muthu Udai Thaamam Nirai Thaazhntha Pandhal Keezh Vandhu - முத்துக்களை யுடைய மாலைத் திரள்கள் தொங்க விடப் பெற்று பந்தலின் கீழே வந்து
என்னை கைத் தலம் பற்ற, Ennai Kaithalam Patra - என்னைப் பாணி க்ரஹணம் செய்தருள
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்