| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 562 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 7 | வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்துப் பரிது வைத்து காய்சின வாய் களிறு அன்னன் என் கை பற்றி தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! வாய் நல்லார், Vai Nallaar - நன்றாக ஓதின வைதிகர்கள் நல்ல மறை ஓதி, Nalla Marai Odhi - சிறந்த வேத வாக்கியங்களை உச்சரிக்க மந்திரத்தால், Manthirathaal - (அந்தந்த க்ரியைகளுக்கு இசைந்த) மந்த்ரங்களைக் கொண்டு பாசு இலை நாணல் படுத்து, Paasu Ilai Naanal Paduthu - பசுமை தங்கிய இலைகளை யுடைத்தான நாணற் புல்லைப் பரிஸ்தரணமாக அமைத்து பரிதி வைத்து, Parithi Vaithu - ஸமித்துக்களை இட்டு காய்சின வாய் களிறு அன்னன், Kaaichina Vaai Kaliru Annan - மிக்க சினத்தை யுடைய மத்த கஜம் போல் செருக்கனான கண்ண பிரான் என் கை பற்றி, En Kai Patri - என் கையைப் பிடித்துக் கொண்டு தீ வலம் செய்ய, Thee Valam Seiya - அக்நியைச் சுற்றி வர நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |