Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 562 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
562நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 7
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிது வைத்து
காய்சின வாய் களிறு அன்னன் என் கை பற்றி
தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
வாய் நல்லார், Vai Nallaar - நன்றாக ஓதின வைதிகர்கள்
நல்ல மறை ஓதி, Nalla Marai Odhi - சிறந்த வேத வாக்கியங்களை உச்சரிக்க
மந்திரத்தால், Manthirathaal - (அந்தந்த க்ரியைகளுக்கு இசைந்த) மந்த்ரங்களைக் கொண்டு
பாசு இலை நாணல் படுத்து, Paasu Ilai Naanal Paduthu - பசுமை தங்கிய இலைகளை யுடைத்தான நாணற் புல்லைப் பரிஸ்தரணமாக அமைத்து
பரிதி வைத்து, Parithi Vaithu - ஸமித்துக்களை இட்டு
காய்சின வாய் களிறு அன்னன், Kaaichina Vaai Kaliru Annan - மிக்க சினத்தை யுடைய மத்த கஜம் போல் செருக்கனான கண்ண பிரான்
என் கை பற்றி, En Kai Patri - என் கையைப் பிடித்துக் கொண்டு
தீ வலம் செய்ய, Thee Valam Seiya - அக்நியைச் சுற்றி வர
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்