| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 563 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 8 | இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை யுடையவன் நாராயணன் நம்பி செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! இம்மைக்கு, Immaikku - இப் பிறவிக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும், Ezh Ezh Piravikum - மேலுள்ள பிறவிகள் எல்லாவற்றிற்கும் பற்று ஆவான், Patru Aavaan - சரண்யனா யிருப்பவனாய் நம்மை உடையவன், Nammai Udaiyavan - நமக்கு சேஷியாய் நம்பி, Nambi - ஸகல கல்யாண குண பரிபூர்ணனாய் நாராயணன், Narayanan - நாராயணனான கண்ண பிரான் செம்மை உடைய திரு கையால், Semmai Udaiya Thiru Kaiyaal - செவ்விய (தனது) திருக் கையினால் தாள் பற்றி, Thaal Patri - (எனது) காலைப் பிடித்து அம்மி மிதிக்க, Ammi Midhikka - அம்மியின் மேல் எடுத்து வைக்க நான் கனாக் கண்டேன், naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |