Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 564 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
564நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 9
வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
வரி சிலை வான் முகம், Vari Silai Vaan Mugam - அழகிய வில் போன்ற புருவத்தையும் ஒளி பொருந்திய முகத்தை யுடையவர்களான
என் ஐமார் தாம், En Aimaar Thaam - எனது தமையன்மார்கள்
வந்திட்டு, Vandhittu - வந்து
எரிமுகம் பாரித்து, Erimugam Paarithu - அக்னியை நன்றாக ஜ்வலிக்கச் செய்து
முன்னே என்னை நிறுத்தி, Munne Yennai Niruthi - அந்த அக்னியின் முன்னே என்னை நிறுத்தி
அரி முகன், Ari Mugan - (ஹிரண்ய வதத்திற்காக) ஸிம்ஹ முகத்தை யுடைனாய் அவதரித்த
அச்சுதன், Achudhan - கண்ண பிரானுடைய
கை மேல், Kai Mel - திருக் கையின் மேல்
என் கை வைத்து, En Kai Vaithu - என்னுடைய கையை வைத்து
பொரி, Pori - பொரிகளை
முகந்து அட்ட, Mugandhu Atta - அள்ளிப் பரிமாற
நான் கனாக் கண்டேன், naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்