| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 564 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 9 | வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! வரி சிலை வான் முகம், Vari Silai Vaan Mugam - அழகிய வில் போன்ற புருவத்தையும் ஒளி பொருந்திய முகத்தை யுடையவர்களான என் ஐமார் தாம், En Aimaar Thaam - எனது தமையன்மார்கள் வந்திட்டு, Vandhittu - வந்து எரிமுகம் பாரித்து, Erimugam Paarithu - அக்னியை நன்றாக ஜ்வலிக்கச் செய்து முன்னே என்னை நிறுத்தி, Munne Yennai Niruthi - அந்த அக்னியின் முன்னே என்னை நிறுத்தி அரி முகன், Ari Mugan - (ஹிரண்ய வதத்திற்காக) ஸிம்ஹ முகத்தை யுடைனாய் அவதரித்த அச்சுதன், Achudhan - கண்ண பிரானுடைய கை மேல், Kai Mel - திருக் கையின் மேல் என் கை வைத்து, En Kai Vaithu - என்னுடைய கையை வைத்து பொரி, Pori - பொரிகளை முகந்து அட்ட, Mugandhu Atta - அள்ளிப் பரிமாற நான் கனாக் கண்டேன், naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |