| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 565 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 10 | குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலம் செய்து மண நீர் அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! குங்குமம், Kungumam - குங்குமக் குழம்பை அப்பி, Appi - உடம்பெல்லாம் பூசி குளிர் சாந்தம், Kulir Saandham - குளிர்ந்த சந்தனத்தை மட்டித்து, Mattithu - மணக்கத் தடவி ஆனை மேல், Aanai Mel - மத்த கஜத்தின் மேலே அவனோடும் உடன் சென்று, Avanodum Udan Sendru - அக் கண்ண பிரானோடு கூடியிருந்து மங்கலம் வீதி, Mangalam Veethi - (விவாஹ நிமித்தமான) அலங்காரங்கள் விளங்குகின்ற வீதிகளிலே வலம் செய்து, Valam Seidhu - ஊர்வலம் வந்து மணம் நீர், Manam Neer - வஸந்த ஜலத்தினால் மஞ்சனம் ஆட்ட, Manjanam Aatta - (எங்க ளிருவரையும்) திருமஞ்சனம் பண்ணுவதாக நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |