Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 565 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
565நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 10
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
குங்குமம், Kungumam - குங்குமக் குழம்பை
அப்பி, Appi - உடம்பெல்லாம் பூசி
குளிர் சாந்தம், Kulir Saandham - குளிர்ந்த சந்தனத்தை
மட்டித்து, Mattithu - மணக்கத் தடவி
ஆனை மேல், Aanai Mel - மத்த கஜத்தின் மேலே
அவனோடும் உடன் சென்று, Avanodum Udan Sendru - அக் கண்ண பிரானோடு கூடியிருந்து
மங்கலம் வீதி, Mangalam Veethi - (விவாஹ நிமித்தமான) அலங்காரங்கள் விளங்குகின்ற வீதிகளிலே
வலம் செய்து, Valam Seidhu - ஊர்வலம் வந்து
மணம் நீர், Manam Neer - வஸந்த ஜலத்தினால்
மஞ்சனம் ஆட்ட, Manjanam Aatta - (எங்க ளிருவரையும்) திருமஞ்சனம் பண்ணுவதாக
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்