Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 566 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
566நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 11
ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே
வேயர் புகழ், Veyar Pugazh - வேயர் குலத்தவரால் புகழப் பட்டவராய்
வில்லிபுத்தூர் கோன், Villiputhoor Kon - ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய (திருமகளான)
கோதை, Kodhai - ஆண்டாள்
தான் ஆயனுக்கு ஆக கண்ட கனாவினை, Thaan Aayanukaaga Kanda Kanaavinai - தான் கோபால க்ருஷ்ணனுக்கு வாழ்க்கைப் பட்டதாகக் கனாக் கண்ட படியைக் குறித்து
சொல், Sol - அருளிச் செய்த
தூய, Thooya - பரிசுத்தமான
தமிழ் மாலை ஈர் ஐந்தும், Tamizh Maalai Eer Aindhum - தமிழ் தொடையான இப் பத்துப் பாட்டுக்களையும்
வல்லவர், Vallavar - ஓத வல்லவர்கள்
வாயும், Vaayum - நற்குணகளமைந்த
நன் மக்களைப் பெற்று, Nan Makkalai Petru - விலக்ஷணரான புத்திரர்களைப் பெற்று
மகிழ்வர், Magizhvar - ஆநந்திக்கப் பெறுவர்கள்