| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 566 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 11 | ஆயனுக்காக தான் கண்ட கனாவினை வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல் தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே | வேயர் புகழ், Veyar Pugazh - வேயர் குலத்தவரால் புகழப் பட்டவராய் வில்லிபுத்தூர் கோன், Villiputhoor Kon - ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய (திருமகளான) கோதை, Kodhai - ஆண்டாள் தான் ஆயனுக்கு ஆக கண்ட கனாவினை, Thaan Aayanukaaga Kanda Kanaavinai - தான் கோபால க்ருஷ்ணனுக்கு வாழ்க்கைப் பட்டதாகக் கனாக் கண்ட படியைக் குறித்து சொல், Sol - அருளிச் செய்த தூய, Thooya - பரிசுத்தமான தமிழ் மாலை ஈர் ஐந்தும், Tamizh Maalai Eer Aindhum - தமிழ் தொடையான இப் பத்துப் பாட்டுக்களையும் வல்லவர், Vallavar - ஓத வல்லவர்கள் வாயும், Vaayum - நற்குணகளமைந்த நன் மக்களைப் பெற்று, Nan Makkalai Petru - விலக்ஷணரான புத்திரர்களைப் பெற்று மகிழ்வர், Magizhvar - ஆநந்திக்கப் பெறுவர்கள் |