திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 567 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
567நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 1
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே
பதவுரை Show / Hide
ஆழி வெண் சங்கே, Aazhi Ven Sange - கம்பீரமாய் வெளுத்திரா நின்ற ஸ்ரீபாஞ்ச ஜந்யாழ்வானே
மருப்பு ஓசித்த மாதவன் தன், Marupu Ositha Madhavan Than - (குவயாபீட யானையன்) கொம்பை முறித்த கண்ண பிரானுடைய
வாய், Vaai - திரு அதரத்தினுடைய
சுவையும், Suvaiyum - ரஸத்தையும்
நாற்றமும், Naatramum - பரிமளத்தையும்
விரும்புற்று, Virumputru - ஆசையோடே
கேட்கின்றேன், Ketkinren - (உன்னைக்) கேட்கிறேன்
திருப் பவளச் செவ்வாய் தான், Thiru Pavala Chevvaai Thaan - (அப்பெருமானுடைய) அழகிய பவளம் போன்ற சிவந்த திருவதரமானது
கருப்பூரம், Karupooram - பச்சைக் கற்பூரம் போல்
நாறுமோ?, Naarumo? - பரிமளிக்குமோ? (அல்லது)
கமலப் பூ, Kamala Poo - தாமரைப் பூப் போலே
நாறுமோ?, Naarumo? - பரிமளிக்குமோ?
தித்தித்திருக்குமோ, Thithithirukkumo - மதுரமான ரஸத்தை உடைத்தாயிருக்குமோ?
சொல், Sol - இன்னபடி யிருக்குமென்று எனக்குச் சொல்