| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 568 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 2 | கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன் உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத் திடரில் குடியேறித் தீய வசுரர் நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே | நல் சங்கே, Nal Sange - அழகிய சங்கே! கடலில், Kadalil - ஸமுத்திரத்திலே பிறந்து, Pirandhu - பிறந்து (அங்கு நின்றும்) பஞ்சசனன் உடலில் போய் வளர்ந்து, Panjasanan Udalil Poi Valarndhu - பஞ்சஜனனென்ற அஸுரனுடைய சரீரத்திற் போய் வளர்ந்து கருதாது, Karudhadhu - (இப்படி பிறந்த விடத்தையும் வளர்ந்த விடத்தையும்) நினையாமல் ஊழியான், Oozhiyaan - எம்பெருமானுடைய கை தலம் திடரில், Kai Thalam Thidaril - கைத் தலமாகிற உந்நத ஸ்தானத்திலே குடி ஏறி, Kudi eri - குடி புகுந்து தீய அசுரர், Theeya Asurar - கொடியவர்களான அசுரர்கள் நடலைப் பட, Nadalai Pada - துன்பப்படும்படி முழங்கும் தோற்றத்தாய், Muzhangum Thotrathaai - ஒலி செய்யும்படியான மேன்மை யுடையையா யிரா நின்றாய் (உன்பெருமையே பெருமை) |