| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 571 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 5 | உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண் மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே | பாஞ்ச சன்னியமே!, Paanja Sanniyame! - சங்கே! ஒரு கடலில், Oru Kadalil - ஒரே கடலில் உன்னோடு உடனே, Unnodu Udane - உன்னோடு கூடவே வாழ்வாரை, Vaazhvaarai - வாழப் பிறந்தவர்களான மற்றும் பலரை இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண், Innaar Inaiyaar Endru Ennuvaar Illai Kaan - ஒரு பதார்த்தமாகவும் மதிப்பாரில்லை காண் (நீ ஒருவன் மாத்திரம்) மன் ஆகி நின்ற, Man Aagi Nindra - ஸர்வ ஸ்வாமியா யிரா நின்ற மதுசூதன், Madhusoodhan - கண்ணபிரானுடைய வாய் அமுதம், Vaai Amudham - திருவாயினமுதத்தை பல் நாளும், Pal Naalum - பல காலமாக உண்கின்றாய், Ungindraai - பருகா நின்றாய் (ஆகையால் நீயே பாக்யசாலி) |