| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 572 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 6 | போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம் சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே | வலம் புரியே!, Valam Puriye! - வலம்புரிச் சங்கே! போய், Poi - வெகு தூரம் வழி நடந்து போய் தீர்த்தம், Theertham - கங்கை முதலிய தீர்த்தங்களிலே ஆடாதே, Aadaadhe - நீராடுகையாகிற கஷ்டங்கள் பட வேண்டாமல் நின்ற, Nindra - நாரத சாபத்தாலே மரமாய் நின்ற புணர் மருதம், Punar Marutham - இரட்டை மருத மரத்தை சாய்த்து ஈர்த்தான், Saaithu eerthaan - முறித்துத் தள்ளின கண்ணபிரானுடைய கைத்தலத்து ஏறி, Kaithalathu eri - திருக் கைத்தலத்தின் மீதேறி குடிகொண்டு, Kudikondu - குடியாயிருந்து சேய், Sei - மிகத்தூரமாய் தீர்த்தமாய் நின்ற, Theerthamaai Nindra - பாவநமாயிருக்கிற செங்கண் மால் தன்னுடைய, Sengan maal Thanudaiya - புண்டரீகாக்ஷனான அவனுடைய வாய்த் தீர்த்தம், Vaai Theertham - வாயம்ருதத்திலே பாய்ந்து, Paaindhu - குதித்து ஆடவல்லாய், Aadavallaai - நீராடவல்லாய் |