திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 573 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
573நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 7
செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல் செங்கண் கரு மேனி வாசுதேவன் உடைய அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும் சங்கரையா உன் செல்வம் சால அழகியதே
பதவுரை Show / Hide
நாள், Naal - அப்போதலர்ந்த
செம் கமலம் மலர் மேல், Sem Kamalam Malar Mel - செந்தாமரைப் பூவில் படிந்து
தேன், Then - தேனை
நுகரும், Nugarum - பருகுகின்ற
அன்னம் போல், Annam Pol - அன்னப் பறவை போன்று
செம் கண் கருமேனி வாசு தேவனுடைய, Sem Kan Karumeni Vaasu Dhevanudaiya - சிவந்த திருக் கண்களையும் கறுத்த திருமேனியை யுமுடைய கண்ணபிரானது
அம் கைத்தலம் ஏறி, Am Kaithalam eri - அழகிய கைத் தலத்தின் மீதேறி
அன்ன வசம் செய்யும், Anna Vasam Seiyum - கண் வளர்கின்ற
சங்கு அரையா!, Sangu Araya! - சங்குகளிற் சிறந்த பாஞ்ச ஜந்யமே!
உன் செல்வம், Un Selvam - உன்னுடைய செல்வமானது
சால, Saala - மிகவும்
அழகியது, Azhagiyadhu - சிறந்தது காண்