Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 574 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
574நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 8
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்
கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார்
பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே
பாஞ்சசன்னியமே, Paanja Sanniyame - சங்கே!,
உண்பது சொல்லில், Unbadhu Sollil - நீ உண்பது என்ன வென்றால்
உலகு அளந்தான் வாய் அமுதம், Ulagu Alanthaan Vaai Amutham - உலகங்களை அளந்தவனான் எம்பெருமானுடைய திருவாயிலுள்ள அம்ருதம்
கண் படை கொள்ளில், Kan Padai Kollil - நீ படுத்துக் கொள்வது எங்கே யென்றால்
கடல் வண்ணன் கை தலத்தே, Kadal Vannan Kai Thalathe - கடல் போன்ற நிறத்தை யுடையனான அவ் வெம்பெருமானுடைய திருக் கையிலே (இப்படி உனக்கு ஊணுமுறக்கமும் அங்கேயா யிருப்பதனால்)
பெண் படையார், Pen Padaiyaar - பெண்குலத்தவர்கள் அனைவரும்
உன் மேல், Un Mel - உன் விஷயமாக
பெரு பூசல், Peru Poosal - பெரிய கோஷம் போடுகிறார்கள் (எங்கள் ஜீவனத்தை இவனே கொள்ளை கொள்ளுகிறானென்று கூச்சலிடுகிறார்கள்)
பண்பு அல செய்கின்றாய், Panbu Ala Seikiraai - (இப்படி அவர்கள் வருந்தும்படி) அநியாயமான காரியத்தைச் செய்கிறாய் (இஃது உனக்குத் தகுதி யல்ல என்கை)