| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 574 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 8 | உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார் பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே | பாஞ்சசன்னியமே, Paanja Sanniyame - சங்கே!, உண்பது சொல்லில், Unbadhu Sollil - நீ உண்பது என்ன வென்றால் உலகு அளந்தான் வாய் அமுதம், Ulagu Alanthaan Vaai Amutham - உலகங்களை அளந்தவனான் எம்பெருமானுடைய திருவாயிலுள்ள அம்ருதம் கண் படை கொள்ளில், Kan Padai Kollil - நீ படுத்துக் கொள்வது எங்கே யென்றால் கடல் வண்ணன் கை தலத்தே, Kadal Vannan Kai Thalathe - கடல் போன்ற நிறத்தை யுடையனான அவ் வெம்பெருமானுடைய திருக் கையிலே (இப்படி உனக்கு ஊணுமுறக்கமும் அங்கேயா யிருப்பதனால்) பெண் படையார், Pen Padaiyaar - பெண்குலத்தவர்கள் அனைவரும் உன் மேல், Un Mel - உன் விஷயமாக பெரு பூசல், Peru Poosal - பெரிய கோஷம் போடுகிறார்கள் (எங்கள் ஜீவனத்தை இவனே கொள்ளை கொள்ளுகிறானென்று கூச்சலிடுகிறார்கள்) பண்பு அல செய்கின்றாய், Panbu Ala Seikiraai - (இப்படி அவர்கள் வருந்தும்படி) அநியாயமான காரியத்தைச் செய்கிறாய் (இஃது உனக்குத் தகுதி யல்ல என்கை) |