Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 575 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
575நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 9
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே
பெரு செல்வம் சங்கே, Peru Selvam Sange - பெரிய செல்வம் படைத்த சங்கமே!
பதினாறாம் ஆயிரவர் தேவிமார், Pathinaaraam Aayiravar Devimaar - பதினாறாயிரம் தேவிமார்கள்
பார்த்து இருப்ப, Paarthu Iruppa - கண்ண பிரானுடைய வாயமுதத்தை நாம் பருக வேணுமென விரும்பி எதிர்பார்த்திருக்கையில்
பொது ஆக உண்பது மாதவன் தன் வாய் அமுதத்தை, Pothu Aaga Unbadhu Madhavan than vaai Amudhathai - பகவத் ஸம்பந்திகளெல்லாரும் பொதுவாக உண்ண வேண்டியதான அவ்வெம்பெருமானது வாயமுதத்தை
நீ புக்கு, Nee Pukku - நீ யொருவனே ஆக்ரமித்து
மது வாயில் கொண்டால் போல் உண்டக்கால், Madhu Vaayil Kondaal pol Undakkaal - தேனை உண்கிறாப் போல் உண்டால்
உன்னோடு சிதையாரோ, Unnodu Sidhaiyaaro - (மற்றபேர்கள்) உன்னோடு விவாதப் பட மாட்டாரோ