| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 576 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 10 | பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும் வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே | பாஞ்சசன்னியத்தை, Paanjachanniyathai - சங்கை பற்பநாபனோடும், Parpanaabanodum - எம்பெருமானோடே வாய்ந்த பெரு சுற்றம் ஆக்கிய, Vaayndha Peru Suththam Aakkiya - கிட்டின பேருறவை யுடையதாக வார்த்தை சொன்ன வண் புதுவை, Van Pudhuvai - அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவவதரித்தவளும் ஏய்ந்த புகழ், Eaindha Pugazh - நிறைந்த புகழை யுடையவளும் பட்டர் பிரான் கோதை, Pattar Piran Kodhai - பெரியாழ்வாருடைய ஆண்டாள் (அருளிச் செய்த) தமிழ் ஈர் ஐந்தும், Thamizh Eer Aindhum - இத் தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் ஆய்ந்து, Aaindhu - அநுஸந்தித்து ஏத்த வல்லார் அவரும், Aetha Vallar Avarum - (இது கொண்டு எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களும் அணுக்கர், Anukkar - பாஞ்சஜந்யம் போல் அந்தரங்கராகப் பெறுவர்கள் |