திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 576 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
576நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 10
பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும் வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே
பதவுரை Show / Hide
பாஞ்சசன்னியத்தை, Paanjachanniyathai - சங்கை
பற்பநாபனோடும், Parpanaabanodum - எம்பெருமானோடே
வாய்ந்த பெரு சுற்றம் ஆக்கிய, Vaayndha Peru Suththam Aakkiya - கிட்டின பேருறவை யுடையதாக வார்த்தை சொன்ன
வண் புதுவை, Van Pudhuvai - அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவவதரித்தவளும்
ஏய்ந்த புகழ், Eaindha Pugazh - நிறைந்த புகழை யுடையவளும்
பட்டர் பிரான் கோதை, Pattar Piran Kodhai - பெரியாழ்வாருடைய ஆண்டாள் (அருளிச் செய்த)
தமிழ் ஈர் ஐந்தும், Thamizh Eer Aindhum - இத் தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
ஆய்ந்து, Aaindhu - அநுஸந்தித்து
ஏத்த வல்லார் அவரும், Aetha Vallar Avarum - (இது கொண்டு எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களும்
அணுக்கர், Anukkar - பாஞ்சஜந்யம் போல் அந்தரங்கராகப் பெறுவர்கள்