| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 577 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 1 | விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே | விண், Vin - ஆகாசம் முழுவதிலும் நீலம் மேலாப்பு விரித்தால் போல், Neelam Melappu Virithaal pol - நீல நிறமான மேற் கட்டியை விரித்துக் கட்டினாற் போலிரா நின்ற மேகங்காள்!, Megangkaal - மேகங்களே! தெள் நீர் பாய், Thel Neer Paai - தெளிந்த தீர்த்தங்கள் பாயுமிடமான வேங்கடத்து, Vengadathu - திருவேங்கடமலையி லெழுந்தருளி யிரா நின்ற என் திருமாலும், En Thirumaalum - திருமாலாகிய எம்பெருமானும் போந்தானே, Pondhaane - (உங்களோடுகூட) எழுந்தருளினானோ? முலை குவட்டில், Mulai Kuvatil - முலை நுனியிலே கண் நீர்கள் துளி சோர, Kan Neergal Thuli sora - கண்ணீர் அரும்ப சோர்வேனை, Sorvenai - வருந்துகிற என்னுடைய பெண் நீர்மை ஈடு அழிக்கு மிது, Pen Neermai eedu Azhikku mithu - பெண்மையை உருவழிக்கிறவிது தமக்கு, Thamakku - அவர் தமக்கு ஓர் பெருமையே, Or Perumaiye - ஒரு பெருமையர யிரா நின்றதோ? |