Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 577 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
577நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 1
விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே
விண், Vin - ஆகாசம் முழுவதிலும்
நீலம் மேலாப்பு விரித்தால் போல், Neelam Melappu Virithaal pol - நீல நிறமான மேற் கட்டியை விரித்துக் கட்டினாற் போலிரா நின்ற
மேகங்காள்!, Megangkaal - மேகங்களே!
தெள் நீர் பாய், Thel Neer Paai - தெளிந்த தீர்த்தங்கள் பாயுமிடமான
வேங்கடத்து, Vengadathu - திருவேங்கடமலையி லெழுந்தருளி யிரா நின்ற
என் திருமாலும், En Thirumaalum - திருமாலாகிய எம்பெருமானும்
போந்தானே, Pondhaane - (உங்களோடுகூட) எழுந்தருளினானோ?
முலை குவட்டில், Mulai Kuvatil - முலை நுனியிலே
கண் நீர்கள் துளி சோர, Kan Neergal Thuli sora - கண்ணீர் அரும்ப
சோர்வேனை, Sorvenai - வருந்துகிற என்னுடைய
பெண் நீர்மை ஈடு அழிக்கு மிது, Pen Neermai eedu Azhikku mithu - பெண்மையை உருவழிக்கிறவிது
தமக்கு, Thamakku - அவர் தமக்கு
ஓர் பெருமையே, Or Perumaiye - ஒரு பெருமையர யிரா நின்றதோ?