Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 578 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
578நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 2
மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத் திண் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே
மா முத்தம் நிதி சொரியும், Maa Mutham Nidhi Soriyum - சிறந்த முத்துக்களையும் பொன்களையும் கொண்டு பொழிகிற
மா முகில்காள், Maa Mugilkaal - காள மேகங்களே!
வேங்கடத்து, Vengadathu - திருமலையிலெழுந்தருளியிரா நின்ற
உள் புகுந்து, Ull Pugundhu - உள்ளே புகுந்து
கதுவப்பட்டு, Kadhuvapattu - கவ்வ, அதனால் பாதைப்பட்டு
கங்குல், Kangul - இரவில்
இடை ஏமத்து, Idai emathu - நடு யாமத்திலே
சாமத்தின் நிறம் கொண்ட, Saamathin Niram Konda - நீலநிற முடையனான
தாளாளன், Thaalaalan - எம்பெருமானுடைய
வார்த்தை என்னே, Vaarthai Enne - ஸமாசாரம் ஏதாகிலுமுண்டோ?
காமம் தீ, Kaamam Thee - காமாக்நியானது
ஓர் தென்றலுக்கு, Or Thendralukku - ஒரு தென்றற் காற்றுக்கு
நான் இலக்கு ஆய், Naan Ilakku Aay - நான் இலக்காகி
இங்கு இருப்பேன், Ingu Irupen - இங்கு இருப்பனோ? (இது தகுதியோ?)