| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 578 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 2 | மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச் சாமத் திண் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல் ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே | மா முத்தம் நிதி சொரியும், Maa Mutham Nidhi Soriyum - சிறந்த முத்துக்களையும் பொன்களையும் கொண்டு பொழிகிற மா முகில்காள், Maa Mugilkaal - காள மேகங்களே! வேங்கடத்து, Vengadathu - திருமலையிலெழுந்தருளியிரா நின்ற உள் புகுந்து, Ull Pugundhu - உள்ளே புகுந்து கதுவப்பட்டு, Kadhuvapattu - கவ்வ, அதனால் பாதைப்பட்டு கங்குல், Kangul - இரவில் இடை ஏமத்து, Idai emathu - நடு யாமத்திலே சாமத்தின் நிறம் கொண்ட, Saamathin Niram Konda - நீலநிற முடையனான தாளாளன், Thaalaalan - எம்பெருமானுடைய வார்த்தை என்னே, Vaarthai Enne - ஸமாசாரம் ஏதாகிலுமுண்டோ? காமம் தீ, Kaamam Thee - காமாக்நியானது ஓர் தென்றலுக்கு, Or Thendralukku - ஒரு தென்றற் காற்றுக்கு நான் இலக்கு ஆய், Naan Ilakku Aay - நான் இலக்காகி இங்கு இருப்பேன், Ingu Irupen - இங்கு இருப்பனோ? (இது தகுதியோ?) |