| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 579 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 3 | ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம் எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால் குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே | அளியத்த மேகங்காள், Aliyatha Megankaal - அருள் புரியக் கடவ மேகங்களே! ஒளி, Oli - தேஹத்தின் காந்தியும் வண்ணம், Vannam - நிறமும் வளை, Valai - வளைகளும் சிந்தை, Sindhai - நெஞ்சும் உறக்கத்தோடு, Urakkathodu - உறக்கமும் ஆகிய இவையெல்லாம் எளிமையால், Elimaiyal - என்னுடைய தைந்யமே காரணமாக என்னை இட்டு, Ennai Ittu - என்னை உபேக்ஷித்து விட்டு ஈடு அழிய, Eedu Azhiya - என் சீர் குலையும்படி போயின, Poyina - நீங்கப் போய் விட்டன ஆல், Aal - அந்தோ! குளிர் அருவி, Kulir Aruvi - குளிர்ந்த அருவிகளை யுடைய வேங்கடத்து, Vengadathu - திருமலையி லெழுந்தருளி யிருக்கிற என் கோவிந்தன், En Govindhan - எனது கண்ண பிரானுடைய குணம், Gunam - திருக் கல்யாண குணங்களை பாடி, Paadi - வாயாரப் பாடிக் கொண்டு (அந்தப் பாட்டே தாரகமாக) ஆவி, Aavi - பிராணனை காத்திருப்பேனே, Kaathiruppene - ரக்ஷித்திருக்க என்னால் முடியுமோ? |