Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 579 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
579நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 3
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே
அளியத்த மேகங்காள், Aliyatha Megankaal - அருள் புரியக் கடவ மேகங்களே!
ஒளி, Oli - தேஹத்தின் காந்தியும்
வண்ணம், Vannam - நிறமும்
வளை, Valai - வளைகளும்
சிந்தை, Sindhai - நெஞ்சும்
உறக்கத்தோடு, Urakkathodu - உறக்கமும் ஆகிய இவையெல்லாம்
எளிமையால், Elimaiyal - என்னுடைய தைந்யமே காரணமாக
என்னை இட்டு, Ennai Ittu - என்னை உபேக்ஷித்து விட்டு
ஈடு அழிய, Eedu Azhiya - என் சீர் குலையும்படி
போயின, Poyina - நீங்கப் போய் விட்டன
ஆல், Aal - அந்தோ!
குளிர் அருவி, Kulir Aruvi - குளிர்ந்த அருவிகளை யுடைய
வேங்கடத்து, Vengadathu - திருமலையி லெழுந்தருளி யிருக்கிற
என் கோவிந்தன், En Govindhan - எனது கண்ண பிரானுடைய
குணம், Gunam - திருக் கல்யாண குணங்களை
பாடி, Paadi - வாயாரப் பாடிக் கொண்டு (அந்தப் பாட்டே தாரகமாக)
ஆவி, Aavi - பிராணனை
காத்திருப்பேனே, Kaathiruppene - ரக்ஷித்திருக்க என்னால் முடியுமோ?