Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 580 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
580நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 4
மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும்
பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே
ஆகத்து மின் எழுகின்ற மேகங்காள், Aagathu Min Ezhuginra Megankaal - சரீரத்திலே மின்னல் தோன்றப் பெற்ற மேகங்களே!
என் ஆகத்து, En Aagathu - என் மார்விலுண்டான
இள கொங்கை, Ila Kongai - இள முலைகளை
தாம் விரும்பி, Thaam Virumbi - அவ் வெம்பெருமான் விரும்பி
பொன் ஆகம் புல்குதற்கு, Pon Aagam Pulkutharku - அழகிய தம் மார்வோடே அணைய வேணு மென்னும் விஷயத்தில்
நாள் தோறும், Naal Thorum - நித்யமும்
என் புரிவடைமை, En Purivadaimai - எனக்கு ஆசையிருக்கிறபடியை
வேங்கடத்துத் தன் ஆகம், Vengaduthu Than Aagam - திருமலையிலே தனது திருமேனியில்
திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு செப்புமினே, Thirumangai Thangiya Seer Maarvarkku cheppumine - பிராட்டி எழுந்தருளி யிருக்கப் பெற்ற திரு மார்பு படைத்த பெருமானுக்கு சொல்லுங்கள்