| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 580 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 4 | மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத் தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும் பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே | ஆகத்து மின் எழுகின்ற மேகங்காள், Aagathu Min Ezhuginra Megankaal - சரீரத்திலே மின்னல் தோன்றப் பெற்ற மேகங்களே! என் ஆகத்து, En Aagathu - என் மார்விலுண்டான இள கொங்கை, Ila Kongai - இள முலைகளை தாம் விரும்பி, Thaam Virumbi - அவ் வெம்பெருமான் விரும்பி பொன் ஆகம் புல்குதற்கு, Pon Aagam Pulkutharku - அழகிய தம் மார்வோடே அணைய வேணு மென்னும் விஷயத்தில் நாள் தோறும், Naal Thorum - நித்யமும் என் புரிவடைமை, En Purivadaimai - எனக்கு ஆசையிருக்கிறபடியை வேங்கடத்துத் தன் ஆகம், Vengaduthu Than Aagam - திருமலையிலே தனது திருமேனியில் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு செப்புமினே, Thirumangai Thangiya Seer Maarvarkku cheppumine - பிராட்டி எழுந்தருளி யிருக்கப் பெற்ற திரு மார்பு படைத்த பெருமானுக்கு சொல்லுங்கள் |