Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 581 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
581நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 5
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறிப் பொழிவீர் காள்
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே
வேங்கடத்து, Vengadathu - திருமலையிலே
தேன் கொண்ட மலர் சிதற, Then Konda Malar Sidhara - தேன் நிறைந்துள்ள புஷ்பங்கள் சிதறும்படி
திரண்டு ஏறி பொழிலீர்காள், Thirandu Eri Pozhileerkaal - திரள் திரளாக ஆகாயத்திலேறி மழையைப் பொழிகின்றவையாயும்
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த, Vaan Kondhu Kilarndhu Ezhundha - ஆகாயத்தைக் கபளீகரித்துக் கொண்டு ஒங்கிக் கிளம்புகின்றவையாயுமுள்ள
மா முகில்காள்!, Maa Mugilkaal! - காள மேகங்களை!
ஊன் கொண்டவள் உகிரால், Oon Kondaval Ukiraal - வலியள்ளவையாய் கூர்மை யுடையவையான நகங்களாலே
இரணியனை உடல் இடந்தான் தான், Iraniyanai Udal Idandhaan thaan - ஹிரண்யாஸுரனுடைய உடலைப் பிளந்தெறிந்த பெருமான்
கொண்ட, Konda - என்னிடத்துக் கொள்ளை கொண்டு போன
சரி வளைகள், Sari Valaigal - கை வளைகளை
தரும் ஆகில், Tharum aagil - திருப்பிக் கொடுப்பதாக விருந்தால்
சாற்றுமின், Saatrumin - எனது அவஸ்த்தையை அவர்க்குத் தெரிவியுங்கள்