| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 581 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 5 | வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத் தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறிப் பொழிவீர் காள் ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான் தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே | வேங்கடத்து, Vengadathu - திருமலையிலே தேன் கொண்ட மலர் சிதற, Then Konda Malar Sidhara - தேன் நிறைந்துள்ள புஷ்பங்கள் சிதறும்படி திரண்டு ஏறி பொழிலீர்காள், Thirandu Eri Pozhileerkaal - திரள் திரளாக ஆகாயத்திலேறி மழையைப் பொழிகின்றவையாயும் வான் கொண்டு கிளர்ந்து எழுந்த, Vaan Kondhu Kilarndhu Ezhundha - ஆகாயத்தைக் கபளீகரித்துக் கொண்டு ஒங்கிக் கிளம்புகின்றவையாயுமுள்ள மா முகில்காள்!, Maa Mugilkaal! - காள மேகங்களை! ஊன் கொண்டவள் உகிரால், Oon Kondaval Ukiraal - வலியள்ளவையாய் கூர்மை யுடையவையான நகங்களாலே இரணியனை உடல் இடந்தான் தான், Iraniyanai Udal Idandhaan thaan - ஹிரண்யாஸுரனுடைய உடலைப் பிளந்தெறிந்த பெருமான் கொண்ட, Konda - என்னிடத்துக் கொள்ளை கொண்டு போன சரி வளைகள், Sari Valaigal - கை வளைகளை தரும் ஆகில், Tharum aagil - திருப்பிக் கொடுப்பதாக விருந்தால் சாற்றுமின், Saatrumin - எனது அவஸ்த்தையை அவர்க்குத் தெரிவியுங்கள் |