| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 582 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 6 | சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள் உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே | சலம் கொண்டு, Salam Kondu - ஸமுத்ர ஜலத்தை முகந்து கொண்டு கிளர்ந்து எழுந்த, Kilarndhu Ezhundha - மேற் கிளம்பி விளங்குகின்ற தண் முகில் காள், Than Mugilkaal - குளிர்ந்த மேகங்களே! மா வலியை, Maa Valiyai - மஹா பலியிடமிருந்து நிலம் கொண்டான் வேங்கடத்து, Nilam Kondaan Vengadathu - பூமியை ஸ்வாதீநப் படுத்திக் கொண்டவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற திருமலையிலே நிரந்து, Nirandhu - பரவி ஏறி, Eri - உயர விருந்து பொழிவீர் காள்!, Pozhiveer kaal! - பொழிகின்ற மேகங்களே! உலங்கு உண்ட, Ulangu unda - பெருங்கொசுக்கள் புஜித்த விளங்கனி போல் உள் மெலிய, Vilangani pol ul Meliya - விளாம்பழம் போல நான் உள் மெலியும் படி புகுந்து, Pugundhu - என்னுள்ளே பிரவேசித்து என்னை, Ennai - என்னுடைய நலம் கொண்ட, Nalam Konda - நிறைவுகளை அபஹரித்த நாரணற்கு, Naaranarku - நாராயணனுக்கு என் நடலை நோய், En Nadalai noi - எனது கஷ்ட வ்யாதியை செப்புமின், Seppumin - தெரிவியுங்கள் |