| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 583 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 7 | சங்க மா கடல் கடைந்தான் த்ண் முகில்காள் வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்கு மேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே | சங்கம், Sangam - சங்குகளை யுடைத்தாயும் பெருமை வாய்ந்தது மா, Maa - பெருமை வாய்ந்ததாயுமான கடல், Kadal - கடலை கடைந்தான், Kadainthaan - கடைந்தருளின பெருமான் எழுந்தருளி யிருக்கிற வேங்கடத்து, Vengadathu - திருமலையில் திரிகிற விண்ணப்பம், Vinnapam - விஜ்ஞாபம் யாதெனில் கொங்கை மேல், Kongai Mel - எனது முலைகளின் மேல் (பூசப் பட்டுள்ள) குங்குமத்தின் குழம்பு, Kungumathin Kuzhambu - குங்குமக் குழம்பானது அழிய, Azhiya - நன்றாக அவிந்து போம்படி தண் முகில் காள், Than Mugilkaal - குளிர்ந்த மேகங்களே! செம் கண் மால், Sem kan maal - புண்டரீகாக்ஷனான அவ் வெம்பெருமானுடைய சே அடி கீழ், Se Adi keezh - செவ்விய திருவடிகளின் கீழ் அடி வீழ்ச்சி, Adi Veezhchi - அடியேனுடைய ஒரு நாள், Oru Naal - ஒரு நாளாகிலும் புகுந்து தங்கும் ஏல், Pugundhu Thangum Yel - அவன் வந்து ஸம்ஸ்லேஷிப்பானாகில் (அப்போது தான்) என் ஆவி தங்கும், En Aavi Thangum - என் பிராணன் நிலை நிற்கும் என்பதாம் உரையீரே, Uraiyire - (இவ் விண்ணப்பத்தை அப் பெருமானிடத்துச்) சொல்லுங்கள் |