| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 584 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 8 | கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள் வேங்கடத்துப் போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே | கார் காலத்து, Kaar Kaalathu - வர்ஷ காலத்திலே வேங்கடத்து எழுகின்ற, Vengadathu Ezhuginra - திருமலையிலே வந்து தோற்றா நின்ற கார் முகில்காள், Kaar Mugilkaal - காள மேகங்களே! போர் காலத்து, Por Kaalathu - யுத்த ஸமயத்திலே எழுந்தருளி, Ezhundharuli - (போர் களத்தில்) எழுந்தருளி பொருதவனார், Poruthavanar - போர் செய்து வெற்றி பெற்ற இராம பிரானுடைய பேர், Per - திரு நாமங்களை சொல்லி, Solli - ஸங்கீர்த்தநம் பண்ணி நீர் காலத்து எருக்கில் அம் பழ இலை போல் வீழ்வேனை, Neer Kaalathu Erukkil Am Pazha Ilai Pol Veezhvenai - மழைகாலத்தில் எருக்கம் பழுப்புக்கள் அற்று விழுவது போல் ஒசிந்து விழுகின்ற எனக்கு வார் காலத்து ஒரு நாள், Vaar Kaalathu Oru Naal - நெடுகிச் செல்லுகிற காலத்திலே ஒரு நாளாகிலும் தம் வாசகம் தந்தருளாரே, Tham Vasagam Thandharulare - தம்முடைய ஒரு வார்த்தையை அருளா தொழிவரோ? |