| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 585 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 9 | மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே | வேங்கடத்தை, Vengadathai - திருமலையை பதி ஆக, Pathi aaga - இருப்பிடமாகக் கொண்டு வாழ்வீர்கள், Vazhveerkal - வாழ்கின்றவையாயும் மதம் யானை போல் எழுந்த, Madham Yaanai pol Ezhundhu - மத்த கஜம் போலே செருக்கிக் கிளர்ந்தவை யாயுமுள்ள மா முகில்காள், Maa Mugilkaal - காள மேகங்களே! பாம்பு அணையான், Paambu Anaiyaan - சேஷ சாயியான எம்பெருமானுடைய வார்த்தை, Vaarthai - வார்த்தை யானது என்னே, Enne - இப்படி பொய்யாய் விட்டதே தான், Thaan - அவ் வெம்பெருமான் தான் என்றும், Endrum - எப்போதைக்கும் கதி ஆவான், Kathi Aavaan - (ஆச்ரிதரகட்கு) ரக்ஷகனா யிருந்து வைத்து கருதாது, Karuthaadhu - அத் தன்மையை நினையாமல் ஓர் பெண் கொடியை, Or Pen Kodiyai - ஒரு பெண் பிள்ளையை வதை செய்தான், Vadhai Seidhaan - கொலை பண்ணினான் என்னும் சொல், Ennum Sol - என்கிற சொல்லை வையகத்தார், Vaiyagathaar - இப் பூமியிலுள்ளவர்கள் மதியாரே, Mathiyaare - மதிக்க மாட்டார்களே |