Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 585 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
585நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 9
மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே
வேங்கடத்தை, Vengadathai - திருமலையை
பதி ஆக, Pathi aaga - இருப்பிடமாகக் கொண்டு
வாழ்வீர்கள், Vazhveerkal - வாழ்கின்றவையாயும்
மதம் யானை போல் எழுந்த, Madham Yaanai pol Ezhundhu - மத்த கஜம் போலே செருக்கிக் கிளர்ந்தவை யாயுமுள்ள
மா முகில்காள், Maa Mugilkaal - காள மேகங்களே!
பாம்பு அணையான், Paambu Anaiyaan - சேஷ சாயியான எம்பெருமானுடைய
வார்த்தை, Vaarthai - வார்த்தை யானது
என்னே, Enne - இப்படி பொய்யாய் விட்டதே
தான், Thaan - அவ் வெம்பெருமான் தான்
என்றும், Endrum - எப்போதைக்கும்
கதி ஆவான், Kathi Aavaan - (ஆச்ரிதரகட்கு) ரக்ஷகனா யிருந்து வைத்து
கருதாது, Karuthaadhu - அத் தன்மையை நினையாமல்
ஓர் பெண் கொடியை, Or Pen Kodiyai - ஒரு பெண் பிள்ளையை
வதை செய்தான், Vadhai Seidhaan - கொலை பண்ணினான்
என்னும் சொல், Ennum Sol - என்கிற சொல்லை
வையகத்தார், Vaiyagathaar - இப் பூமியிலுள்ளவர்கள்
மதியாரே, Mathiyaare - மதிக்க மாட்டார்களே