திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 585 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
585நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 9
மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே
பதவுரை Show / Hide
வேங்கடத்தை, Vengadathai - திருமலையை
பதி ஆக, Pathi aaga - இருப்பிடமாகக் கொண்டு
வாழ்வீர்கள், Vazhveerkal - வாழ்கின்றவையாயும்
மதம் யானை போல் எழுந்த, Madham Yaanai pol Ezhundhu - மத்த கஜம் போலே செருக்கிக் கிளர்ந்தவை யாயுமுள்ள
மா முகில்காள், Maa Mugilkaal - காள மேகங்களே!
பாம்பு அணையான், Paambu Anaiyaan - சேஷ சாயியான எம்பெருமானுடைய
வார்த்தை, Vaarthai - வார்த்தை யானது
என்னே, Enne - இப்படி பொய்யாய் விட்டதே
தான், Thaan - அவ் வெம்பெருமான் தான்
என்றும், Endrum - எப்போதைக்கும்
கதி ஆவான், Kathi Aavaan - (ஆச்ரிதரகட்கு) ரக்ஷகனா யிருந்து வைத்து
கருதாது, Karuthaadhu - அத் தன்மையை நினையாமல்
ஓர் பெண் கொடியை, Or Pen Kodiyai - ஒரு பெண் பிள்ளையை
வதை செய்தான், Vadhai Seidhaan - கொலை பண்ணினான்
என்னும் சொல், Ennum Sol - என்கிற சொல்லை
வையகத்தார், Vaiyagathaar - இப் பூமியிலுள்ளவர்கள்
மதியாரே, Mathiyaare - மதிக்க மாட்டார்களே