| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 586 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 10 | நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய் மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம் போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ் ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே | நல் நுதலாள், Nal Nudhalaal - விலக்ஷணமான முகத்தை யுடையளாய் போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை, Pogathil Vazhuvadha Puthuvaiyar Kon Kodhai - பகவத நுபவத்தில் குறையாதவரான பெரியாழ்வாருடைய மகளான ஆண்டாள் நாகத்தின் அணையான் வேங்கடக் கோனை, Naagathin Anaiyaan Vengada Konai - திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையனான திருவேங்கட முடையானை நயந்து, Nayandhu - ஆசைப்பட்டு உரை செய், Urai Sei - அருளிச் செய்ததாய் மேகத்தை விட்டு அதில் விண்ணப்பம், Megathai Vittu Adhil Vinnapam - மேகத்தை தூது விடுவதாக அமைந்த லிண்ணப்பமாகிய தமிழ், Thamizh - இத் தமிழ்ப் பாசுரங்களை ஆகத்து வைத்து, Aagathu Vaithu - ஹ்ருதயத்திலே வைத்துக் கொண்டு உரைப்பாரவர், Uraipaaravar - ஓத வல்லவர்கள் அடியார் ஆகுவர், Adiyaar Aaguvar - எம்பெருமானுக்கு நித்ய கைங்கரியம் பண்ணப் பெறுவர்கள் |