Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 587 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
587நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 1
சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ
திரு மாலிருஞ்சோலை எங்கும், Thirumaalirunjolai engum - திருமாலிருஞ்சோலையில் பார்த்த விடமெங்கும்
இந்திர கோபங்கள், Indira Gopangal - பட்டுப் பூச்சிகளானவை
செம், Sem - சிவந்த
சிந்துரம் பொடி போல், Sindhuram Podi pol - ஸிந்தூரப் பொடி போல
எழுந்து, Ezhundhu - மேலெழுந்து
பரந்திட்டன, Parandhittana - பரவிக் கிடக்கின்றன
ஆல், Aal - அந்தோ!
அன்று, Andru - (கடலைக் கடைந்து அமுதமளிக்கவேணுமென்று தேவர்கள் சரணம் புகுந்து வேண்டின) அக் காலத்திலே
மந்தரம், Mandharam - மந்தர மலை
நாட்டி, Naati - (பாற் கடலில் மத்தாத) நாட்டி (கடல் கடைந்து)
கொழு மதுரம், Kozhu Madhuram - மிகவும் மதுரமான
சாறு, Saaru - அம்ருத ரஸத்தை
கொண்ட, Konda - எடுத்துக் கொண்ட
சுந்தரம் தோள் உடையான், Sundharam thol udaiyaan - ஸ்ரீ ஸுந்தர பாஹு நாதனுடைய
சுழலையில் நின்று, Suzhalaiyil nindru - சூழ் வலையில் நின்றும்
உய்தும் கொல், Uydhum kol - பிழைப்போமோ?