| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 587 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 1 | சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும் இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ | திரு மாலிருஞ்சோலை எங்கும், Thirumaalirunjolai engum - திருமாலிருஞ்சோலையில் பார்த்த விடமெங்கும் இந்திர கோபங்கள், Indira Gopangal - பட்டுப் பூச்சிகளானவை செம், Sem - சிவந்த சிந்துரம் பொடி போல், Sindhuram Podi pol - ஸிந்தூரப் பொடி போல எழுந்து, Ezhundhu - மேலெழுந்து பரந்திட்டன, Parandhittana - பரவிக் கிடக்கின்றன ஆல், Aal - அந்தோ! அன்று, Andru - (கடலைக் கடைந்து அமுதமளிக்கவேணுமென்று தேவர்கள் சரணம் புகுந்து வேண்டின) அக் காலத்திலே மந்தரம், Mandharam - மந்தர மலை நாட்டி, Naati - (பாற் கடலில் மத்தாத) நாட்டி (கடல் கடைந்து) கொழு மதுரம், Kozhu Madhuram - மிகவும் மதுரமான சாறு, Saaru - அம்ருத ரஸத்தை கொண்ட, Konda - எடுத்துக் கொண்ட சுந்தரம் தோள் உடையான், Sundharam thol udaiyaan - ஸ்ரீ ஸுந்தர பாஹு நாதனுடைய சுழலையில் நின்று, Suzhalaiyil nindru - சூழ் வலையில் நின்றும் உய்தும் கொல், Uydhum kol - பிழைப்போமோ? |