திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 588 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
588நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 2
போர்க் களிறு பொரும் மாலிரும் சோலை யம்பூம் புறவில் தார்க் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன் ஆர்க்கிடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே
பதவுரை Show / Hide
போர் களிறு, Por Kaliru - போர் செய்வதையே தொழிலாக வுடைய யானைகள்
பொரும், Porum - பொருது விளையாடுமிடமான
மாலிருஞ் சோலை, Maalirunjolai - திருமாலிருஞ் சோலை மலையினுடைய
அம்பூம் புறவில், Amboom Puravil - மிகவுமழகிய தாழ்வரைகளிலே
தார் கொடி முல்லைகளும், Thaar Kodi Mullaigalum - அரும்புகளை யுடைய கொடி முல்லைகளும்
தவளம் நகை, Thavalam Nagai - (அழகருடைய) வெளுத்த புன்சிரிப்பை
காட்டுகின்ற, Kaatukindra - நினைப்பூட்டா நின்றன (அன்றியும்)
கார் கொள், Kaar kol - சினை கொண்ட
படாக்கள், Padaakal - படா என்னுங் கொடிகள்
நின்று, Nindru - பூத்து நின்று
கழறி சிரிக்க, Kazhari Sirikka - ‘எமக்கு நீ தப்பிப் பிழைக்க முடியாது‘ என்று சொல்லிக் கொண்டே சிரிப்பது போல விகஸிக்க
தரியேன், Thariyen - (அது கண்டு) தரிக்க மாட்டுகின்றிலேன்
தோழீ, Thozhi - எனது உயிர்த் தோழியே!
அவன் தார், Avan thaar - (நாம் ஆசைப்பட்ட) அவனுடைய தோள் மாலையானது
செய்த, Seidha - உண்டு பண்ணின
பூசலை, Poosalai - பரிபவத்தை
ஆர்க்கு இடுகோ, Aarku idugo - யாரிடத்து முறையிட்டுக் கொள்வது?