Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 589 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
589நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 3
கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே
ஒண், On - அழகிய
கருவிளை மலர்காள், Karuvilai Malarkaal - காக்கணம் பூக்களே!
காயா மலர்காள், Kaayaa Malarkaal - காயாம் பூக்களே! (நீங்கள்)
திருமால், Thirumaal - எம்பெருமானுடைய
உரு ஒளி, Uru Oli - திருமேனியின் நிறத்தை
காட்டுகின்றீர், Kaatukindreer - நீனைப்பூட்டாநின்றீர்கள்
எனக்கு, Enakku - (அதனை நீனைத்து வருந்துகின்ற) எனக்கு
உய் வழக்கு ஒன்று, Uy Vazhakku ondru - பிழைக்கும் வகை யொன்றை
உரையீர், Uraiyeer - சொல்லுங்கள்
திரு விளையாடு, Thiru Vilaiyaadu - பெரிய பிராட்டியார் விளையாடுமிடமான
திண் தோள், Thin Thol - திண்ணிய திருத் தோளை யுடையரான
திருமாலிருஞ் சோலை நம்பி, Thirumaalirunjolai Nambi - அழகர்
இல் புகுந்து, il pugundhu - (எனது) வீட்டினுள் புகுந்து
வரி வளை, Vari Valai - (எனது) அழகிய வளைகளை
வந்தி பற்றும் வழக்கு உளதே, Vandhi patrum vazhaku uladhe - பலாத்காரமாகக் கொள்ளைகொண்டு போவதும் நியாயமோ?