| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 589 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 3 | கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர் திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே | ஒண், On - அழகிய கருவிளை மலர்காள், Karuvilai Malarkaal - காக்கணம் பூக்களே! காயா மலர்காள், Kaayaa Malarkaal - காயாம் பூக்களே! (நீங்கள்) திருமால், Thirumaal - எம்பெருமானுடைய உரு ஒளி, Uru Oli - திருமேனியின் நிறத்தை காட்டுகின்றீர், Kaatukindreer - நீனைப்பூட்டாநின்றீர்கள் எனக்கு, Enakku - (அதனை நீனைத்து வருந்துகின்ற) எனக்கு உய் வழக்கு ஒன்று, Uy Vazhakku ondru - பிழைக்கும் வகை யொன்றை உரையீர், Uraiyeer - சொல்லுங்கள் திரு விளையாடு, Thiru Vilaiyaadu - பெரிய பிராட்டியார் விளையாடுமிடமான திண் தோள், Thin Thol - திண்ணிய திருத் தோளை யுடையரான திருமாலிருஞ் சோலை நம்பி, Thirumaalirunjolai Nambi - அழகர் இல் புகுந்து, il pugundhu - (எனது) வீட்டினுள் புகுந்து வரி வளை, Vari Valai - (எனது) அழகிய வளைகளை வந்தி பற்றும் வழக்கு உளதே, Vandhi patrum vazhaku uladhe - பலாத்காரமாகக் கொள்ளைகொண்டு போவதும் நியாயமோ? |