திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 592 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
592நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 6
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன் ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ
பதவுரை Show / Hide
நறு பொழில் நாறும், Naru Pozhil Naarum - பரிமளம் மிகுந்த பொழில்கள் மணங்கமழா நிற்கப் பெற்ற
மாலிருஞ் சோலை, Maalirunjolai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற)
நம்பிக்கு, Nambiku - எம்பெருமானுக்கு
நான், Naan - அடியேன்
நூறு தடாவில், Nooru Tadaavil - நூறு தடாக்களில் நிறைந்த
வெண்ணெய், Vennnei - வெண்ணெயை
வாய் நேர்ந்து, Vaai Nerndhu - வாயாலே சொல்லி
பராவி வைத்தேன், Paraavi Vaithen - ஸமர்ப்பித்தேன் (இன்னமும்)
நூறு தடா நிறைந்த, Nooru Thadaa Niraindha - நூறு தடாக்களில் நிறைந்த
அக்கார அடிசில், Akkara adisil - அக்கார வடிசிலும்
சொன்னேன், Sonnen - வாசிகமாக ஸமர்ப்பித்தேன்
இவை, Ivai - இந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும்
ஏறு திரு உடையான், Eru Thiru Udaiyaan - (நாட்செல்ல நாட்செல்ல) ஏறி வருகிற ஸம்பத்தை யுடையரான அழகர்
இன்று வந்து, Indru Vandhu - இன்று எழுந்தருளி
கொள்ளும் கொல், Kollum Kol - திருவுள்ளம் பற்றுவரோ?