Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 592 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
592நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 6
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ
நறு பொழில் நாறும், Naru Pozhil Naarum - பரிமளம் மிகுந்த பொழில்கள் மணங்கமழா நிற்கப் பெற்ற
மாலிருஞ் சோலை, Maalirunjolai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற)
நம்பிக்கு, Nambiku - எம்பெருமானுக்கு
நான், Naan - அடியேன்
நூறு தடாவில், Nooru Tadaavil - நூறு தடாக்களில் நிறைந்த
வெண்ணெய், Vennnei - வெண்ணெயை
வாய் நேர்ந்து, Vaai Nerndhu - வாயாலே சொல்லி
பராவி வைத்தேன், Paraavi Vaithen - ஸமர்ப்பித்தேன் (இன்னமும்)
நூறு தடா நிறைந்த, Nooru Thadaa Niraindha - நூறு தடாக்களில் நிறைந்த
அக்கார அடிசில், Akkara adisil - அக்கார வடிசிலும்
சொன்னேன், Sonnen - வாசிகமாக ஸமர்ப்பித்தேன்
இவை, Ivai - இந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும்
ஏறு திரு உடையான், Eru Thiru Udaiyaan - (நாட்செல்ல நாட்செல்ல) ஏறி வருகிற ஸம்பத்தை யுடையரான அழகர்
இன்று வந்து, Indru Vandhu - இன்று எழுந்தருளி
கொள்ளும் கொல், Kollum Kol - திருவுள்ளம் பற்றுவரோ?