| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 592 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 6 | நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன் ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ | நறு பொழில் நாறும், Naru Pozhil Naarum - பரிமளம் மிகுந்த பொழில்கள் மணங்கமழா நிற்கப் பெற்ற மாலிருஞ் சோலை, Maalirunjolai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) நம்பிக்கு, Nambiku - எம்பெருமானுக்கு நான், Naan - அடியேன் நூறு தடாவில், Nooru Tadaavil - நூறு தடாக்களில் நிறைந்த வெண்ணெய், Vennnei - வெண்ணெயை வாய் நேர்ந்து, Vaai Nerndhu - வாயாலே சொல்லி பராவி வைத்தேன், Paraavi Vaithen - ஸமர்ப்பித்தேன் (இன்னமும்) நூறு தடா நிறைந்த, Nooru Thadaa Niraindha - நூறு தடாக்களில் நிறைந்த அக்கார அடிசில், Akkara adisil - அக்கார வடிசிலும் சொன்னேன், Sonnen - வாசிகமாக ஸமர்ப்பித்தேன் இவை, Ivai - இந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும் ஏறு திரு உடையான், Eru Thiru Udaiyaan - (நாட்செல்ல நாட்செல்ல) ஏறி வருகிற ஸம்பத்தை யுடையரான அழகர் இன்று வந்து, Indru Vandhu - இன்று எழுந்தருளி கொள்ளும் கொல், Kollum Kol - திருவுள்ளம் பற்றுவரோ? |