Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 593 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
593நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 7
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே
தென்றல், Thendral - தென்றல் காற்றானது
மணம் கமழும், Manam Kamazhum - மணத்தைக் கொண்டு வீசுகின்ற
திரு மாலிருஞ் சோலை தன்னுள், Thiru Maalirunjolai thannul - திருமாலிருஞ்சோலை மலையிலே
நின்ற, Nindra - எழுந்தருளி யிருக்கிற
பிரான், Piran - ஸ்வாமியான அழகர்
இன்று, Indru - இன்றைக்கு
வந்து, Vandhu - இவ்விட மெழுந்தருளி
இத்தனையும், Ithanaiyum - நூறு தடா நிறைந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும்
அமுது செய் திட பெறில், Amuthu seithida peril - அமுது செய்தருளப் பெற்றால் (அவ்வளவுமன்றி)
அடியேன் மனத்தே வந்து நேர் படில், Adiyen manathe vandhu ner padil - அடியேனுடைய ஹ்ருதயத்திலே நித்ய வாஸம் பண்ணப் பெற்றால்
நான், Naan - அடியேன்
ஒன்று, Ondru - ஒரு தடாவுக்கு
நூறு ஆயிரம் ஆ கொடுத்து, Nooru Aayiram Aa Koduthu - நூறாயிரம் தடாக்களாக ஸமர்ப்பித்து
பின்னும், Pinnum - அதற்கு மேலும்
ஆளும் செய்வன், Aalum Seivan - ஸகல வித கைங்கரியங்களும் பண்ணுவேன்