Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 594 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
594நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 8
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே
கரிய குருவி கணங்கள், Kariya kuruvi kanangal - கரிய குருவிக் கூட்டங்கள்
காலை, Kaalai - விடியற்காலத்திலே
எழுந்திருந்து, Ezhundhirundhu - எழுந்து
சோலைமலை பெருமான், Solaimalai Peruman - திருமாலிருஞ்சோலை மலைக்குத் தலைவனாயும்
துவராபதி எம்பெருமான், Dhuvarapathi Emperuman - துவராபுரிக்குத் தலைவனாயும்
ஆலின் இலை பெருமான் அவன், Aalin ilai Peruman avan - ஆலிலையில் வளர்ந்த பெருமானுயுமுள்ள அந்த ஸர்வேச்வரனுடைய
வார்த்தை, vaarthai - வார்த்தைகளை
உரைக்கின்ற, uraikindra - சொல்லா நின்றன (இப்படி)
மாலின், Maalin - எம்பெருமானுடைய
வரவு, Varavu - வருகையை
சொல்லி, solli - சொல்லிக் கொண்டு
மருள் பாடுதல், Marul paaduthal - மருளென்கிற பண்ணைப் பாடுவதானது
மெய்ம்மை கொல், Meimmai kol - மெய்யாகத் தலைக் கட்டுமா