| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 594 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 8 | காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே | கரிய குருவி கணங்கள், Kariya kuruvi kanangal - கரிய குருவிக் கூட்டங்கள் காலை, Kaalai - விடியற்காலத்திலே எழுந்திருந்து, Ezhundhirundhu - எழுந்து சோலைமலை பெருமான், Solaimalai Peruman - திருமாலிருஞ்சோலை மலைக்குத் தலைவனாயும் துவராபதி எம்பெருமான், Dhuvarapathi Emperuman - துவராபுரிக்குத் தலைவனாயும் ஆலின் இலை பெருமான் அவன், Aalin ilai Peruman avan - ஆலிலையில் வளர்ந்த பெருமானுயுமுள்ள அந்த ஸர்வேச்வரனுடைய வார்த்தை, vaarthai - வார்த்தைகளை உரைக்கின்ற, uraikindra - சொல்லா நின்றன (இப்படி) மாலின், Maalin - எம்பெருமானுடைய வரவு, Varavu - வருகையை சொல்லி, solli - சொல்லிக் கொண்டு மருள் பாடுதல், Marul paaduthal - மருளென்கிற பண்ணைப் பாடுவதானது மெய்ம்மை கொல், Meimmai kol - மெய்யாகத் தலைக் கட்டுமா |