திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 595 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
595நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 9
கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல் தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன் பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ
பதவுரை Show / Hide
கோங்கு அலரும் பொழில், Kongu Alarum Pozhil - கோங்கு மரங்கள் மலரப் பெற்ற சோலைகளை யுடைய
மாலிருஞ் சோலையில், Maalirunjolaiyil - திருமாலிருஞ் சோலை மலையில்
கொன்றைகள் மேல், Kondraigal Mel - கொன்றை மரங்களின் மேல்
தூங்கு, Thoongu - தொங்குகின்ற
பொன் மாலைகளோடு உடனாய் நின்று, Pon Maalaigalodu Udanay Nindru - பொன் நிறமான பூமாலை களோடு ஸமமாக
தூங்குகின்றேன், Thoongukinren - வாளா கிடக்கின்றேன்
பூ கொள், Poo kol - அழகு பொருந்திய
திரு முகத்து, Thiru Mugathu - திருப் பவளத்திலே
மடுத்து, Maduthu - வைத்து
ஊதிய, Oodhiya - ஊதப் படுகிற
சங்கு, Sangu - ஸ்ரீபாஞ்சஜந்யத்தினுடைய
ஒலியும், Oliyum - த்வநியும்
சார்ங்கம் வில்நாண் ஒலியும், Saarngam Vilnaan Oliyum - சார்ங்கமென்னும் வில்லின் நாணோசையும்
தலைப் பெய்வது, Thalai Peivadhu - ஸமீபிப்பது
எஞ்ஞான்று கொல், Yenjaandru kol - என்றைக்கோ?