| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 595 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 9 | கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல் தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன் பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ | கோங்கு அலரும் பொழில், Kongu Alarum Pozhil - கோங்கு மரங்கள் மலரப் பெற்ற சோலைகளை யுடைய மாலிருஞ் சோலையில், Maalirunjolaiyil - திருமாலிருஞ் சோலை மலையில் கொன்றைகள் மேல், Kondraigal Mel - கொன்றை மரங்களின் மேல் தூங்கு, Thoongu - தொங்குகின்ற பொன் மாலைகளோடு உடனாய் நின்று, Pon Maalaigalodu Udanay Nindru - பொன் நிறமான பூமாலை களோடு ஸமமாக தூங்குகின்றேன், Thoongukinren - வாளா கிடக்கின்றேன் பூ கொள், Poo kol - அழகு பொருந்திய திரு முகத்து, Thiru Mugathu - திருப் பவளத்திலே மடுத்து, Maduthu - வைத்து ஊதிய, Oodhiya - ஊதப் படுகிற சங்கு, Sangu - ஸ்ரீபாஞ்சஜந்யத்தினுடைய ஒலியும், Oliyum - த்வநியும் சார்ங்கம் வில்நாண் ஒலியும், Saarngam Vilnaan Oliyum - சார்ங்கமென்னும் வில்லின் நாணோசையும் தலைப் பெய்வது, Thalai Peivadhu - ஸமீபிப்பது எஞ்ஞான்று கொல், Yenjaandru kol - என்றைக்கோ? |