Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 595 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
595நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 9
கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ
கோங்கு அலரும் பொழில், Kongu Alarum Pozhil - கோங்கு மரங்கள் மலரப் பெற்ற சோலைகளை யுடைய
மாலிருஞ் சோலையில், Maalirunjolaiyil - திருமாலிருஞ் சோலை மலையில்
கொன்றைகள் மேல், Kondraigal Mel - கொன்றை மரங்களின் மேல்
தூங்கு, Thoongu - தொங்குகின்ற
பொன் மாலைகளோடு உடனாய் நின்று, Pon Maalaigalodu Udanay Nindru - பொன் நிறமான பூமாலை களோடு ஸமமாக
தூங்குகின்றேன், Thoongukinren - வாளா கிடக்கின்றேன்
பூ கொள், Poo kol - அழகு பொருந்திய
திரு முகத்து, Thiru Mugathu - திருப் பவளத்திலே
மடுத்து, Maduthu - வைத்து
ஊதிய, Oodhiya - ஊதப் படுகிற
சங்கு, Sangu - ஸ்ரீபாஞ்சஜந்யத்தினுடைய
ஒலியும், Oliyum - த்வநியும்
சார்ங்கம் வில்நாண் ஒலியும், Saarngam Vilnaan Oliyum - சார்ங்கமென்னும் வில்லின் நாணோசையும்
தலைப் பெய்வது, Thalai Peivadhu - ஸமீபிப்பது
எஞ்ஞான்று கொல், Yenjaandru kol - என்றைக்கோ?