| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 596 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 10 | சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே | சந்தொடு, Santhodu - சந்தனக் கட்டைகளையம் கார் அகிலும், Kaar Agilum - காரகிற் கட்டைகளையும் சுமந்து, Sumandhu - அடித்துக் கொண்டு தடங்கள் பொருது வந்து, Thadangal Poruthu Vandhu - பல பல குளங்களையும் அழித்துக் கொண்டு ஓடி வந்து இழியும், Izhiyum - பெருகுகின்ற சிலம்பாறு உடை, Silambaaru udai - நூபுர கங்கையையுடைத்தான மாலிருஞ் சோலை நின்ற சுந்தரனை, Maalirunjolai Nindra Sundharanai - திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளி யிருக்கிற அழகரைக் குறித்து சுரும்பு ஆர் குழல் கோதை, Surumbu Aar Kuzhal Kodhai - வண்டுகள் படித்த கூந்தல் முடியை யுடைய ஆண்டாள் தொகுத்து உரைத்த, Thoguthu uraitha - அழகாக அருளிச் செய்த செம் தமிழ் பத்தும் வல்லார், Sem Thamizh Pathum Vallar - செந்தமிழிலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள் திருமால் அடி, Thirumaal Adi - ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகளை சேர்வர்கள், Servarkal - அடையப் பெறுவர்கள் |