| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 597 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 1 | கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப் போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான் ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த் தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ | கார் கோடல் பூங்காள், Kaar Kodal Poonkaal - கறுத்த காந்தள் பூக்களே! உம்மை, Ummai - உங்களை போர் கோலம் செய்து, Por kolam seithu - யுத்தத்திற்கு உசிதமாக அலங்கரித்து எம் மேல், Em Mel - என் மேலே போர விடுத்தவன், Pora Viduthavan - அனுப்பினவானான கார் கடல் வண்ணன், Kaar Kadal Vannan - கறுத்த கடல் போன்ற வடிவை யுடையனான கண்ணபிரான் எங்குற்றான், Engutraan - எங்கே யிருக்கிறான்? நாம், Naam - (உங்களால் மிகவும் நலிவுபட்ட) நான் இனி, Ini - இனி மேல் ஆர்க்கு, Aarkku - யாரிடத்தில் போய் பூசல் இடுவதோ, Poosal Idhuvatho - முறை யிட்டுக் கொள்வதோ (அறியேன்) அணி, Ani - அழகிய துழாய் தார்க்கு, Thuzhaai thaarku - திருத் துழாய் மாலையை ஆசைப்பட்டு ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ!, Odum Nenjam thannai padaikka vallen Andho! - ஓடுகின்ற நெஞ்சை யுடையவளா யிரா நின்றேனே! ஐயோ! |