| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 599 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 3 | கோவை மணாட்டி நீ யுன் கொழுங்கனி கொண்டு எம்மை ஆவி தொலைவியேல் வாய் அழகர் தம்மை அஞ்சுதும் பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல் நாவும் இரண்டுள வாய்த்து நாணியிலேனுக்கே | கோவை மானாட்டி, Kovai Maanatti - அம்மா! கோவைக் கொடியே! நீ, Nee - நீ உன், Un - உன்னுடைய கொழுங்கனி கொண்டு, Kozhunkani Kondu - அழகிய பழங்களாலே எம்மை, Emmai - என்னுடைய ஆவி, Aavi - உயிரை தொலைவியேல், Tholaiviyel - போக்கலாகாது வாய் அழகர் தம்மை, Vaai Azhagar Thammai - அழகிய வாய் படைத்த பெருமான் விஷயத்திலே அஞ்சுதும், Anjuthum - பயப்படா நின்றேன்! பாவியேன், Paaviyen - பாவியானா நான் தோன்றி, thondri - பிறந்த பின்பு நாணிலியேனுக்கு, Naaniliyenukku - லஜ்ஜை யற்றவளான என் விஷயத்திலே பாம்பு அணையார்க்கும், Paambu Anaiyaarkum - சேஷ சாயியான பெருமாளுக்கும் தம் பாம்பு போல், Tham Paambu Pol - தமது படுக்கையான திருவனந்தாழ்வானுக்குப் போல நாவும் இரண்டு உள ஆயிற்று, Naavum Irandu Ula Aaitru - இரண்டு நாக்குகள் உண்டாயின |