Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 6 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
6திருப்பல்லாண்டு || 6
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு
வோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி
அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்
தாண்டு என்று பாடுதுமே
எந்தை, Endhai - நானும் என் தகப்பனும் இருவர்
தந்தை தந்தை தந்தை, Thandhai Thandhai Thandhai - என்று ஒரு மூவர்
தம் மூத்தப்பன், Tham Moothappan - அவனுக்குத் தந்தையும் பாட்டனுமாகிய
ஏழ் படி கால் தொடங்கி, Ezh Padi Kaal Thodangi - ஏழு தலைமுறைகள் தொடங்கி
வந்து, Vandhu - மங்களாசாஸநம் பண்ணத்தக்க ஸமயங்கங்களிலே வந்து
வழி வழி, Vazhi Vazhi - முறை முறையாக
ஆட்செய்கின்றோம்,Aatcheikinrom - அடிமை செய்கிறோம்
திருவோணத் திருவிழவில், Thiruvonath Thiruvizhavil - திருவோணமென்கிற திருநாளிலே
அந்தியம் போதில், Andhiyam Pothil - (அஸுரருடைய பலம் வளரும்) அந்திவேளையிலே
அரியுருவாகி, Ariyuruvagi - நரஸிம் ஹரூபத்தை உடையவனாய்
அரியை , Ariyai - (தன் அடியவனான ப்ரஹ்லாதனுக்கு) சத்துருவான இரணியனை
அழித்தவனை, Azhithavannai - உருவழித்தவனுக்கு
பந்தனை தீர, Pandhanai Theera - (அவனை ஸம் ஹரித்ததினால் உண்டான) ஆயாஸம் தீரும்படியாக
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதும், Pallaandu Pallaayiraththaandendru Paaduthum - காலதத்வமுள்ள வரையில் மங்களாசாஸநம் செய்வோம்