| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 6 | திருப்பல்லாண்டு || ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –அவதாரிகை --அநந்ய பிரயோஜனருக்கும் பிரயோஜநாந்த பரருக்கும் உண்டான நெடு வாசி அறிந்து இருக்கச் செய்தேயும் அநந்ய பிரயோஜனரை அழைத்த சமனந்தரம் -இவர்களை அழைக்கைக்கு அடி -உதாராஸ் சர்வ ஏவைத -என்னுமவன் சீலத்தாலும் – அவனோடு இவர்களுக்கு உண்டான அவர்ஜநீய சம்பந்தத்தாலும் – இவர்களுக்கும் அவற்றையே நினைத்து தேங்காதே புகலாம் படியாய் இ றே இருப்பது – ஆகையாலே -அநந்ய பிரயோஜனரை அழைத்தவோபாதி இவர்களையும் அழைத்தாராய்-நின்றார் கீழ் – இதில் வாழாளில் அழைத்த அநந்ய பிரயோஜனர் -தங்கள் ஸ்வரூபத்தையும் ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியையும் சொல்லிக் கொண்டு வந்து புகுர -அவர்களைக் கூட்டிக் கொள்ளுகிறார் – ஏழாட் காலும் பழிப்பிலோம் -என்று பிரயோஜனந்த பரரைக் குறித்து தாம் அருளிச் செய்த-தம்முடைய திரளுக்கு உண்டான ஏற்றத்தை புகுருகிறவர்கள் -தங்களுக்கு உண்டானதாக-சொல்லிக் கொண்டு வந்து புகுருகிறார்கள் -தம் தாம் ஏற்றம் சொல்லிக் கொண்டு வந்து-புகுருகை சாத்விகருக்கு யுக்தமோ என்னில் –ஆழ்வார் உடைய திரு உள்ளம் பயம்-கெடுகைக்காக சொல்லுகிறார்கள் ஆகையாலே யுக்தம் பன்னகாச நமாகாசே பதந்தம் பஷி சேவிதே-வைநதேய மஹம் சக்த பரிகந்தும் சஹச்ரச -என்று திருவடி ஸ்வ சக்தியை சொன்னான் இ றே-முதலிகள் உடைய பயம் சமிக்கைகாக 6 | எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு வோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே | எந்தை, Endhai - நானும் என் தகப்பனும் இருவர் தந்தை தந்தை தந்தை, Thandhai Thandhai Thandhai - என்று ஒரு மூவர் தம் மூத்தப்பன், Tham Moothappan - அவனுக்குத் தந்தையும் பாட்டனுமாகிய ஏழ் படி கால் தொடங்கி, Ezh Padi Kaal Thodangi - ஏழு தலைமுறைகள் தொடங்கி வந்து, Vandhu - மங்களாசாஸநம் பண்ணத்தக்க ஸமயங்கங்களிலே வந்து வழி வழி, Vazhi Vazhi - முறை முறையாக ஆட்செய்கின்றோம்,Aatcheikinrom - அடிமை செய்கிறோம் திருவோணத் திருவிழவில், Thiruvonath Thiruvizhavil - திருவோணமென்கிற திருநாளிலே அந்தியம் போதில், Andhiyam Pothil - (அஸுரருடைய பலம் வளரும்) அந்திவேளையிலே அரியுருவாகி, Ariyuruvagi - நரஸிம் ஹரூபத்தை உடையவனாய் அரியை , Ariyai - (தன் அடியவனான ப்ரஹ்லாதனுக்கு) சத்துருவான இரணியனை அழித்தவனை, Azhithavannai - உருவழித்தவனுக்கு பந்தனை தீர, Pandhanai Theera - (அவனை ஸம் ஹரித்ததினால் உண்டான) ஆயாஸம் தீரும்படியாக பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதும், Pallaandu Pallaayiraththaandendru Paaduthum - காலதத்வமுள்ள வரையில் மங்களாசாஸநம் செய்வோம் |